NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை?
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை?
    இந்திய-கனட உறவுகள் சிதைந்துள்ளன.

    காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணை: அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா, ஏன் கனடாவுக்கு ஒத்துழைக்கவில்லை?

    எழுதியவர் Sindhuja SM
    Nov 28, 2023
    12:44 pm

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இதனையடுத்து, அவரது கொலையில் இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக கனட அரசாங்கம் பெரும் குற்றசாட்டை முன்வைத்தது.

    இதனால், இந்திய-கனட உறவுகள் சிதைந்துள்ளன.

    இதற்கிடையில், இன்னொரு காலிஸ்தான் பயங்கரவாதியான குர்பத்வந்த் சிங் பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும், அந்த சதி திட்டத்தில் இந்தியாவின் பங்கு இருப்பதாகவும் அமெரிக்கா சந்தேகிக்கிறது.

    எனவே, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு எதிரான குற்றசாட்டுகளை தனித்தனியாக விசாரித்து வருகின்றன.

    பில்ஜவ்கு

    அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா 

    இந்நிலையில், இது குறித்து பேசி இருக்கும் கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, அமெரிக்காவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    ஆனால், கனடாவின் விசாரணைக்கு ஒத்துழைக்க இந்தியா முன்பு மறுத்துவிட்டது.

    இந்த விசாரணைகள் தொடர்பாக இரு நாடுகளும் பகிர்ந்து கொண்ட தகவல்களில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, இந்தியா இந்த இரு விவகாரங்களையும் வெவ்வேறு விதமாக அணுகியுள்ளது என்று இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா கூறியுள்ளார்.

    CTV என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த சஞ்சய் குமார் வர்மா, "கனடாவை போலல்லாமல், அமெரிக்க அதிகாரிகள் விசாரணை தொடர்பான குறிப்பிட்ட தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதனால், அந்த இரு விவகாரங்களையும் இந்திய அரசு வெவ்வேறு விதமாக அணுகி இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கனடா
    அமெரிக்கா
    பயங்கரவாதம்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    இந்தியா

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத ரிங்கு சிங்கின் சிக்ஸர், ஏன்? டி20 கிரிக்கெட்
    புதிய செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்கத் திட்டமிடும் முருகப்பா குழுமம் வணிகம்
    இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள புதிய கோரிக்கைகளை முன்வைத்திருக்கும் டெஸ்லா டெஸ்லா
    சீனாவில் பரவிவரும் வினோத நிமோனியா காய்ச்சல்; இந்தியாவை பாதிக்குமா? நிமோனியா

    கனடா

    'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்திக்கிறார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா
    விசா ஸ்பான்சர்சிப் தருவதாக கனடாவில் சீக்கிய இளைஞர்களை ஈர்க்கும் காலிஸ்தானி ஆதரவாளர்கள் இந்தியா
    "நிஜ்ஜார் கொலையை அரசியல் லாபங்களுக்காக ட்ரூடோ பயன்படுத்துகிறார்": கனடா முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    அமெரிக்கா

    'காசாவுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி இருப்பது அமெரிக்கா தான்': ஈரான் அதிபர்  ஈரான்
    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம் ஹமாஸ்
    சிரியாவில் ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மூன்றாவது முறையாக தாக்குதல் ஈரான்
    அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம் குடியரசு தலைவர்

    பயங்கரவாதம்

    இந்திய-கனட மோதலுக்கு காரணமான காலிஸ்தான் பயங்கரவாதி: யாரிந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?  இந்தியா
    முடிவுக்கு வந்தது காஷ்மீர் பயங்கரவாத என்கவுண்டர்: கொல்லப்பட்டார் பயங்கரவாதி உசைர் கான் ஜம்மு காஷ்மீர்
    பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர்  ஐநா சபை
    1980களில் இருந்தே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் கனடா: ஒரு அதிர்ச்சி தகவல்  கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025