NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய வங்கதேச எல்லையில் தேனீக்களை வளர்க்கும் பிஎஸ்எப்- காரணம் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய வங்கதேச எல்லையில் தேனீக்களை வளர்க்கும் பிஎஸ்எப்- காரணம் தெரியுமா?
    கடத்தலை தடுக்க தேனீ பெட்டிகளை வங்கதேச எல்லையில் நிறுவியுள்ள பிஎஸ்எப்.

    இந்திய வங்கதேச எல்லையில் தேனீக்களை வளர்க்கும் பிஎஸ்எப்- காரணம் தெரியுமா?

    எழுதியவர் Srinath r
    Nov 06, 2023
    04:48 pm

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இந்திய வங்கதேச எல்லையில், தேன் கூடுகளை எல்லை பாதுகாப்பு படை(பிஎஸ்எப்) அமைந்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

    நாடியா மாவட்டத்தில் பிஎஸ்எப்-இன் 32வது பட்டாலியன் படைப்பிரிவு சார்பில், முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திட்டத்தின் மூலம், எல்லை பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதுடன், அங்குள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

    இந்திய, வங்கதேசம் இடையே 4,096 கிலோமீட்டர் எல்லையில், 2,217 கிலோமீட்டர் மேற்கு வங்கத்தில் உள்ளது. வங்கதேசத்திலிருந்து நாடியா மாவட்டம் வழியாக தங்கம், வெள்ளி, போதை பொருட்கள் மற்றும் பசுமாடுகள் அதிகமாக கடத்தப்படுகிறது.

    இதை தடுப்பதற்காகவே சீரான இடைவெளிகளில் தேன்கூடுகளை வைத்துள்ளதாகவும், அது அந்த வழியாக மனிதர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    2nd card

    வேலைவாய்ப்பை உண்டாக்கும் பிஎஸ்எப்

    துளசி, ஏகங்கி, சத்துமுளி, அஸ்வகந்தா, சோற்றுக்கற்றாழை, கடுக்காய் போன்ற மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகள், எல்லையோரப் பகுதிகளில் உள்ளூர் மக்களுடன் இணைந்து படை வீரர்களால் நடப்படுகிறது.

    இவை, பிஎஸ்எப் வீரர்களின் மனைவிகளால் நடத்தப்படும் கடைகள் மூலம் விற்கப்படுகின்றன.

    நாடியா மாவட்டத்தில் கடிபுர் கிராமத்தில், சமீபத்தில் தேனீக்களின் பலன்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம் நடத்தப்பட்டது.

    ஆயுஷ் அமைச்சகத்தின் ஆதரவுடன் பிஎஸ்எப் இந்த முயற்சியைத் தொடங்கியது. இது தேனீக்கள் மற்றும் அவற்றை அலாய் செய்யப்பட்ட "ஸ்மார்ட் வேலியில்" இணைக்கும் நிபுணத்துவத்தை வழங்கியது.

    பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், தேனீ பெட்டிகள் வேலியில் சீரான இடைவெளியில் மற்றும் கடத்தல், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் நிறுவப்படுகின்றன. இருப்பினும், பெட்டிகளின் சரியான எண்ணிக்கையை பிஎஸ்எப் வெளியிடப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    இந்தியா
    கடத்தல்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் இந்தியா
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா

    இந்தியா

    2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறவிருக்கும் அணிகள்? ஒருநாள் உலகக்கோப்பை
    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை  தமிழிசை சௌந்தரராஜன்
    நவம்பர் 1 (நாளை) முதல் அமலாகவிருக்கும் நிதி சார்ந்த மாற்றங்கள்! நிதித்துறை
    வேவு பார்க்கப்படும் அரசியல்வாதிகளின் ஐபோன்கள்.. ஆபத்பாந்தவனாக உதவும் ஐபோனின் 'லாக்டவுன் மோடு' ஆப்பிள்

    கடத்தல்

    கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தங்க கடத்தல் அதிகரிப்பு - IRS அதிகாரி அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    குஜராத்தில் 5 ஆண்டுகளில் 41 ஆயிரம் பெண்கள் மாயம் - அதிர்ச்சி தகவல்  குஜராத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025