NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதல்வர் ஸ்டாலினே தேர்வு செய்த தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் IAS 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதல்வர் ஸ்டாலினே தேர்வு செய்த தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் IAS 
    புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்

    முதல்வர் ஸ்டாலினே தேர்வு செய்த தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளர் தீரஜ் குமார் IAS 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 17, 2024
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் அதிகரித்து வரும் அரசியல் கொலைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு காரணமாக நேற்று பல IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    அதில் குறிப்பாக, உள்துறை செயலாளராக இருந்த அமுதா மாற்றப்பட்டு, புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    யார் இவர்? எதற்காக இந்த திடீர் இடமாற்றங்கள்?

    தொடரும் கொலைகள்

    தமிழகத்தில் தொடரும் கொலைகள்

    தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் ரௌடியிசம் மற்றும் அரசியல் கொலைகள், அதோடு கூடுதலாக நாட்டையே உலுக்கிய கள்ளச்சாரய மரணம் உட்பட ஆளும் திமுக அரசின் மீது கடும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

    ஸ்டாலின் அரசு சட்ட ஒழுங்கை காப்பாற்ற தவறி விட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

    குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு பின்னர் சென்னையின் புதிய கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று பல IAS அதிகாரிகள் மாற்றப்பட்டன. இந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை சரியாக கையாளாத காரணத்தால் இந்த மாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக, உள்துறை செயலாளராக இருந்த அமுதா IAS இடமாற்றம் செய்யப்பட்டு, மூத்த ஐஏஎஸ் அதிகாரி தீரஜ்குமார் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    தீரஜ்குமார்

    பள்ளி கல்வித்துறை தொடங்கி உள்துறை வரை: யார் இந்த தீரஜ்குமார்

    பீகார் மாநிலத்தை சேர்ந்த தீரஜ்குமார், 1993 தமிழ்நாடு IAS பேட்ச் அதிகாரி. ஆரமபத்தில் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக இருந்த அவர், கடந்த 2021ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார்.

    சென்ற ஆண்டு, வணிக வரித்துறை செயலாளராக பணியமர்த்தப்பட்ட அவர் தற்போது, உள்துறை செயலாளராக பதவி ஏற்கவுள்ளார்.

    முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் சட்டம் ஒழுங்கிற்கு காரணமான உள்துறைக்கு தீரஜ்குமாரை நியமிக்கப்பட்டிருப்பது, அரசு இந்த விஷயத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.

    இவரது தேர்வை முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உள்துறை
    தமிழக அரசு
    தமிழகம்
    தமிழக முதல்வர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    உள்துறை

    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா
    ஜி20 மாநாடு: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புப் படைகளை அனுப்ப திட்டமிட்டிருக்கும் மத்திய அரசு  இந்தியா

    தமிழக அரசு

    தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாள்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தமிழக முதல்வர்
    எல்காட் நிறுவன மேலாண் இயக்குநர் அனீஷ் சேகர் ராஜினாமா தமிழ்நாடு
    நோ பவர்கட்: பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்காக தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு பொதுத்தேர்வு
    மிக்ஜாம் புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் 6000 ரூபாய் டெபாசிட்  தமிழ்நாடு

    தமிழகம்

    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை புதுச்சேரி
    15 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை புதுச்சேரி
    4 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை புதுச்சேரி

    தமிழக முதல்வர்

    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர் தமிழ்நாடு
    பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை  தமிழக காவல்துறை
    மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    மகளிர் உரிமை தொகை: 91 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்  கருணாநிதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025