NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?': உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?': உச்ச நீதிமன்றம் 

    'கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?': உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 30, 2023
    02:14 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு இரண்டு ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறித்து நேற்று பேசிய உச்ச நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

    மேலும், ஆளுநர்கள் எப்போது மசோதாக்களை இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வகுப்பது குறித்து பரிசீலிக்க இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கூடுதலாக, எட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்திக்குமாறு கேரள ஆளுநரிடம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    கேரள சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்ததை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

    டவ்ஜ்கஃபிக்

    தமிழகத்தை தொடர்ந்து கேரள அரசின் மனுவையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் 

    இந்நிலையில், கேரள அரசின் மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்த விவாகரத்தில் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

    ஆளுநர் அலுவலகம் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, எட்டு மசோதாக்களில் ஏழு மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் கூறினார்.

    அதனையடுத்து, "இரண்டு ஆண்டுகளாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்?" என்று நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியது.

    மேலும், இந்த விஷயத்தில் ஆளுநர் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் இல்லையென்றால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    கேரளா

    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? நவராத்திரி
    மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் கே.எஸ்.அச்சுதானந்தனின் 100வது பிறந்தநாள்  பினராயி விஜயன்
    திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன? திருவனந்தபுரம்

    உச்ச நீதிமன்றம்

    காவிரி விவகாரம் - கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்த காவிரி ஒழுங்காற்று குழு  காவிரி
    லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு - மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி  ரஜினிகாந்த்
    '26 வார கருவை கொல்ல முடியாது': உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து  மத்திய அரசு
    ஒரே பாலின திருமணம் இந்தியாவில் அங்கீகரிக்கப்படுமா? இன்னும் 5 நாட்களுக்குள் தீர்ப்பு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025