NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம்
    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம்

    இந்த தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யத் திட்டமிட்டிருக்கும் மேற்கு வங்காளம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 05, 2023
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது மேற்கு வங்காளம். ஒரு குறிப்பிட்ட பட்டாசு பசுமைப் பட்டாசா இல்லையா என்பதைக் கண்டறிய QR கோடுகளும் பட்டாசில் அச்சிடப்பட்டிருக்கின்றன.

    பசுமைப் பட்டாசுகளைத் தவிர்த்த பிற வகையான பட்டாசுகளை மேற்கு வங்காளத்தில் விற்பனை செய்யத் தடை செய்யப்பட்டிருப்பதோடு, அவற்றை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவிருக்கிறது.

    பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் கடந்த ஆண்டே கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்த ஆண்டும் தொடர்ந்து அது கடைப்பிடிக்கப்படவிருக்கிறது.

    பட்டாசு

    பசுமைப் பட்டாசுகள் என்றால் என்ன? 

    காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தாமல் இருக்கும் வகையில் உருவாக்கப்படும் பட்டாசுகளையே பசுமைப் பட்டாசுகள் என அழைக்கின்றனர்.

    சாதாரண பட்டாசுகளில் பேரியம் என்ற வேதிப்பொருளின் கலவை இடம்பெற்றிருக்கும். இந்த வேதிப்பொருளே, ஒரு பட்டாசின் ஒலி மற்றும் காற்று மாசுவுக்கு காரணமாக அமைகிறது. பசுமைப் பட்டாசுகளில் இந்த பேரியம் வேதிப்பொருளின் பயன்பாடு இருக்காது.

    புகை மற்றும் ஒலி மட்டுமால்லாது இந்த பசுமை பட்டாசுகள் தூசியையும் அதிகளவில் உற்பத்தி செய்யாது. முக்கியமாக காற்று மாசுவுக்கு காரணமாக இருக்கும் நுண்துகள்களை சுத்தமாக வெளியிடாது.

    எனவே தான் பல்வேறு மாநிலங்களிலும் தீபாவளியன்று இந்த பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்த மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

    தீபாவளி

    வெளி மாநிலங்களில் இருந்து பட்டாசு இறக்குமதி:

    நாளை (நவம்பர் 6) முதல் நவம்பர் 12ம் தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது மேற்கு வங்காள அரசு.

    மேலும், பட்டாசு தயாரிப்பின் போது தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு விபத்துகளினால் பட்டாசு உற்பத்தியை மூன்று மாத காலம் நிறுத்தி வைத்தது மேற்கு வங்காளம். அதன் காரணமாக தற்போது அம்மாநில பட்டாசுத் தேவையில் 40% மட்டுமே உள்மாநிலத்தில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.

    கூடுதலான பட்டாசுத் தேவைக்கு வெளிமாநிலங்களில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்யத் திட்டமிட்டிருக்கிறது மேற்கு வங்காளம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தீபாவளி
    தீபாவளி 2023
    மேற்கு வங்காளம்
    காற்று மாசுபாடு

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    தீபாவளி

    தீபாவளி 2023: பட்டாசுகளை விற்கவும் வாங்கவும் தடை விதித்தது டெல்லி அரசு  டெல்லி
    நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு விக்ரம்
    சிவகாசியில் இரு வேறு இடங்களில் நேர்ந்த பட்டாசு விபத்து - 13 பேர் பலி  விருதுநகர்
    ரயில்வே ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் அறிவிப்பு மத்திய அரசு

    தீபாவளி 2023

    இந்தியா முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தீபாவளி

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் இந்தியா
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா

    காற்று மாசுபாடு

    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள் தமிழக அரசு
    டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை குளிர்காலம்
    மிகவும் மோசமடைந்தது டெல்லியின் காற்று மாசு  டெல்லி
    டெல்லியில் மோசமடைந்த காற்றின் தரம்: பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025