தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1 தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும். பிப்ரவரி 2 தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும். பிப்ரவரி 3 தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 7 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை.