NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்
    வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை உயர்வு

    வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 344 ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 03, 2024
    12:05 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவின் வயநாடு நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 344ஐ எட்டியுள்ளது. கேரள அரசு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

    அதோடு, மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் ஆழமான தேடுதல் ரேடார்களை அனுப்புமாறு கேரள அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

    இதற்கிடையே, இந்திய ராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவில் இருந்து ஒரு Xaver ரேடார் மற்றும் டெல்லியில் உள்ள திரங்கா மலை மீட்பு குழுவின் நான்கு Reeco ரேடார்களும், மத்திய அரசின் உத்தரவின்பேரில் விமானப்படை விமானத்தில் வயநாட்டிற்கு சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) அனுப்பப்பட்டன.

    ஐந்தாவது நாளாக தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னும் 200 பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

    மீட்புப் பணி

    வயநாடு மீட்புப் பணிகளை பார்வையிட மோகன்லால் வருகை தர உள்ளதாக தகவல்

    1,300க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் கனரக இயந்திரங்கள் மற்றும் அதிநவீன உபகரணங்களுடன் உயிர் பிழைத்தவர்களைத் தேடுகின்றனர்.

    லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மீட்புப் பணிகளை பார்வையிட சனிக்கிழமை வயநாடு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண்பது மற்றும் அடக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்கு வழிகாட்டுதல்களை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

    வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு உடல் அல்லது உடல் உறுப்புக்கும் ஒரு அடையாள எண் ஒதுக்கப்பட வேண்டும்.

    இதற்கிடையில், வயநாட்டில் உள்ள 13 கிராமங்கள் உட்பட ஆறு மாநிலங்களில் உள்ள 56,800 சதுர கிலோமீட்டர் மேற்குத் தொடர்ச்சி மலைகள், சுற்றுச்சூழல் உணர்வுப் பகுதியாக (ESA) மத்திய அரசு அறிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வயநாடு
    நிலச்சரிவு
    கேரளா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    வயநாடு

    வயநாடு நிலச்சரிவுக்கு என்ன காரணிகள் பங்களித்தன?  நிலச்சரிவு

    நிலச்சரிவு

    ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை  மகாராஷ்டிரா
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம் மகாராஷ்டிரா

    கேரளா

    சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்  கவர்னர்
    நடவடிக்கை எடுக்க கோரி சாலையோரத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கேரள ஆளுநருக்கு Z+ பாதுகாப்பை வழங்கியது மத்திய அரசு உள்துறை
    கேரள பாஜக தலைவர் கொலை வழக்கு: PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு மரண தண்டனை கொலை
    "கேரள அரசு பகலில் SFI உடனும், இரவில் PFI உடனும் செயல்படுகிறது": கேரள ஆளுநர்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025