NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டசபை தேர்தல்: ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிராவில் வாக்குப்பதிவு துவங்கியது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டசபை தேர்தல்: ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிராவில் வாக்குப்பதிவு துவங்கியது
    காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    சட்டசபை தேர்தல்: ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிராவில் வாக்குப்பதிவு துவங்கியது

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 20, 2024
    09:03 am

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின் முதல் மற்றும் ஒரே கட்ட வாக்குப்பதிவு 288 தொகுதிகளிலும் காலை 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது.

    அதே நேரத்தில், ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளை உள்ளடக்கிய இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது.

    முதல் கட்டமாக, 43 இடங்களுக்கு, நவம்பர், 13ல் நடந்தது.

    அதிக வாக்காளர் எண்ணிக்கையை ஊக்குவிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) SVEEP திட்டத்தின் கீழ் மல்டிமீடியா பிரச்சாரங்கள், மனித சங்கிலிகள், தெரு நாடகங்கள், மாரத்தான்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிரா

    முக்கிய கட்சிகள் களத்தில் உள்ளன

    மகாராஷ்டிராவில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தில் உள்ளது, அதே நேரத்தில் மகா விகாஸ் அகாடி மீண்டும் வர முயற்சிக்கிறது.

    2,086 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 4,136 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

    பாஜக 149 இடங்களிலும், சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    காங்கிரஸ் 101 இடங்களிலும், சிவசேனா (யுபிடி) 95 இடங்களிலும், என்சிபி (எஸ்பி) 86 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

    பகுஜன் சமாஜ் கட்சி, AIMIM போன்ற சிறிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

    ஜார்கண்ட்

    முக்கிய போட்டியாளர்கள் 

    ஜார்க்கண்டில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்.டி.ஏ.) இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது.

    புதன் கிழமை வாக்கெடுப்பில் முக்கிய வேட்பாளர்கள் பர்ஹைத்தில் போட்டியிடும் ஜேஎம்எம்-ன் ஹேமந்த் சோரன், தன்வாரில் பாஜகவின் பாபுலால் மராண்டி மற்றும் நாலாவில் ஜேஎம்எம்-ன் ரவீந்திர நாத் மஹதோ ஆகியோர் அடங்குவர்.

    மற்ற குறிப்பிடத்தக்க போட்டியாளர்கள், டும்ரியில் உள்ள ஜேஎம்எம்மின் பெபி தேவி, மதுபூரில் ஜேஎம்எம்மின் ஹபிசுல் அன்சாரி மற்றும் மகாகமவில் காங்கிரஸின் தீபிகா பாண்டே ஆகியோர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்
    ஜார்கண்ட்
    மகாராஷ்டிரா

    சமீபத்திய

    டிரம்ப் தான் காரணமா? இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த கூற்று குறித்து முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விமர்சனம் அமெரிக்கா
    இந்தியா - அமெரிக்கா இடையே ஜூலை 8க்குள் இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனத் தகவல் வர்த்தகம்
    18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம் டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2025: வாழ்வா சாவா போராட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றி; பிளேஆஃப் சுற்றில் மோதும் நான்கு அணிகள் இவைதான் ஐபிஎல் 2025

    தேர்தல்

    ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மக்களவை சபாநாயகர் தேர்தல்: வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்? சபாநாயகர்
    பாகிஸ்தான் தேர்தல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: அமெரிக்கா தீர்மானம்  அமெரிக்கா
    இன்று இங்கிலாந்து பொது தேர்தல்: ரிஷி சுனக் மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா? இங்கிலாந்து
    இங்கிலாந்து பொதுத் தேர்தல்கள் ஏன் எப்போதும் வியாழக்கிழமைகளில் நடத்தப்படுகின்றன  இங்கிலாந்து

    தேர்தல் ஆணையம்

    மணிப்பூர்: வன்முறைக்குப் பிறகு 11 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது மணிப்பூர்
    தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்! தமிழ்நாடு
    தேர்தலுக்கு முன்னரே சூரத்தில் வெற்றி பெற்ற பாஜக; எப்படி? பாஜக
    தேர்தலை கட்டுப்படுத்த முடியாது, தேர்தல் ஆணையம் சந்தேகங்களை நிவர்த்தி செய்தது: VVPAT வழக்கில் உச்ச நீதிமன்றம் தேர்தல்

    ஜார்கண்ட்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    ஃபோன் பேசும்போது அழுததால் தனது 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொன்ற பெண் கைது காவல்துறை
    ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் கார் டிவைடரில் மோதியதால் 6 பேர் பலி விபத்து
    இத்தாலியில் சடலமாக மீட்கப்பட்ட இந்திய மாணவர்: உடலை இந்தியாவுக்கு கொண்டு வர குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை  இத்தாலி

    மகாராஷ்டிரா

    காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான்  காங்கிரஸ்
    10% இடஒதுக்கீட்டிற்கான மராத்தா இடஒதுக்கீடு மசோதாவுக்கு மகாராஷ்டிரா சட்டசபை ஒப்புதல்  இந்தியா
    டெல்லி, புனேயில் 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 'மியாவ் மியாவ்' போதைப்பொருள் பறிமுதல் புது டெல்லி
    மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான மனோகர் ஜோஷி காலமானார் முதல் அமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025