NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம்
    சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் போராட்டம்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 15, 2023
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட்: கடந்த 3 நாட்களாக சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதைக் கண்டித்து தொழிலாளர்கள், குடும்பத்தினர் மற்றும் பலர் இன்று சுரங்கப்பாதைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 200 மீட்டர் பரப்பளவின் மீது சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை அடுத்து, அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த 40 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கினர்.

    அந்த தொழிலாளர்களை மீட்பதற்கு 70 மணிரத்திற்கும் மேலாக மீட்பு குழுக்கள் இடிந்து விழுந்த பாறைகளை அதிநவீன இயந்திரங்கள் கொண்டு துளையிட்டு வந்தன.

    ஆனால், நேற்று இரவு திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவால், தோண்டப்பட்டிருந்த துளைகள் மூடப்பட்டு, துளையிடும் ட்ரில்லிங் இயந்திரமும் சேதமடைந்தது.

    டிஜிக்லவ்க்ன்

    மீட்பு குழுக்களிடம் மாற்றுத் திட்டம் ஏதும் இல்லாததால் மக்கள் கோபம் 

    மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில், புது டெல்லியில் இருந்து புதிய இயந்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

    அந்த இயந்திரங்கள் வந்து சேர்வதற்காக மீட்பு குழுக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

    இதற்கிடையில், விபத்து நடந்த சுரங்கப்பாதைக்கு முன், பெரும் திரளாக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நேற்று துளையிடும் ட்ரில்லிங் இயந்திரங்கள் சேதமடைந்ததை சுட்டி காட்டியுள்ள போராட்டக்காரர்கள், மீட்பு குழுக்களிடம் மாற்றுத் திட்டம் ஏதும் இல்லை என்று கூறி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    எனினும், சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் குழாய்கள் மூலம் கீழே அனுப்பப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரகாண்ட்
    விபத்து
    போராட்டம்
    இந்தியா

    சமீபத்திய

    புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு ஜோ பைடனின் முதல் பதிவு ஜோ பைடன்
    ஐபிஎல் 2025 எஸ்ஆர்எச்vsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    உங்கள் வீட்டில் வைஃபை இணைப்பு விரைவில் வலுவாகவும் வேகமாகவும் மாறப்போகிறது தொலைத்தொடர்புத் துறை
    இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது; இலங்கை பிரஜையை நாடுகடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    விபத்து

    நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லாரி: 11 பேர் பலி  ராஜஸ்தான்
    திருச்சி-குஜராத் செல்லும் 'ஹம்சஃபர்' ரயிலில் திடீர் தீ விபத்து திருச்சி
    ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி திருமணங்கள்
    காரின் பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுநர் - பலியான பாதசாரி சென்னை

    போராட்டம்

    ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டதால் தொல். திருமாவளவன் கைது தமிழ்நாடு
    அமைச்சர் உறுதியளித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ் இந்தியா
    கிருஷ்ணகிரியில் எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு-200 பேர் கைது தமிழ்நாடு
    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் விழுப்புரம்

    இந்தியா

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் - போட்டியிலிருந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான்  ஆப்கானிஸ்தான்
    Sports Round Up: ஆஃப்கானிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; இடைநீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட்; முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஒருநாள் உலகக்கோப்பை
    பிரதமர் மோடியின் உரை இடம்பெற்றிருந்த 'சிறுதானிய பாடல்' கிராமி விருதுக்கு பரிந்துரை  பிரதமர் மோடி
    இந்தியாவில் கடந்த அக்டோபரில் உயர்ந்த வாகன உற்பத்தி மற்றும் விற்பனை  ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025