NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எல்லை பாதுகாப்புப் படை தலைவரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    எல்லை பாதுகாப்புப் படை தலைவரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு
    எல்லை பாதுகாப்புப் படை

    எல்லை பாதுகாப்புப் படை தலைவரை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 03, 2024
    10:45 am

    செய்தி முன்னோட்டம்

    எல்லையில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) இயக்குநர் ஜெனரல் நிதின் அகர்வால் மற்றும் துணை சிறப்பு டிஜி (மேற்கு) ஒய்.பி. குரானியா ஆகியோரை பணியிலிருந்து நீக்கியுள்ளது.

    இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ள மத்திய அரசு, அவர்களை தங்கள் மாநில பணிக்கு திரும்ப அனுப்பியுள்ளது.

    தீவிரவாதம் தொடர்பான விவகாரங்களில் தலைமை பொறுப்பில் உள்ளவர்களை நீக்குவது இதுவே முதல்முறையாகும்.

    முன்னதாக, கடந்த 2019-ல் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும்கூட, இதுபோன்ற வெளிப்படையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தீவிரவாத தாக்குதல்

    பாகிஸ்தான் எல்லையில் அதிகரிக்கும் தீவிரவாத தாக்குதல்

    கடந்த இரண்டு மாதங்களில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் பதுங்கியிருந்து தாக்குதல்கள் வழக்கமான நிகழ்வுகளாகி விட்டன.

    குறிப்பாக, நீண்ட காலமாக தீவிரவாதிகளின் செயல்பாடுகள் இல்லாமல் இருந்த பிர் பஞ்சலின் தெற்குப் பகுதிகளில் கூட தற்போது தீவிரவாத தாக்குதல் நடக்கின்றன.

    அங்கு நடந்த சமீபத்திய தாக்குதல்களில் இரண்டு இராணுவ அதிகாரிகள் வீர மரணம் அடைந்தனர் மற்றும் இரண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    எல்லையை காவல் காத்து வரும் பிஎஸ்எஃப் மற்றும் இதர பாதுகாப்புப் படைகளிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததுதான் இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரிக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், அதை சரியாக கையாளவில்லை என்பதன் அடிப்படையில், இருவரையும் பிஎஸ்எஃப் படையிலிருந்து மத்திய அரசு விடுவித்துள்ளதாகத் தெரிகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தீவிரவாதம்
    பாதுகாப்பு துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள் கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    ஆஸ்திரியாவில் பிரதமர் மோடிக்கு இசை வரவேற்பு அளித்த கலாச்சார தூதர்: யாரிந்த விஜய் உபாத்யாயா? ஆஸ்திரியா
    போதை மருந்துகளால் 828 திரிபுரா மாணவர்களுக்கு பரவிய HIV: உண்மையில் என்ன நடந்தது? திரிபுரா
    பட்ஜெட் 2024: தொலைத்தொடர்பு துறை வளர்ச்சிக்கு தேவையானது என்ன? பட்ஜெட்

    தீவிரவாதம்

    அடுத்த குறி ஹபீஸ் சயீத்தாக இருக்குமா? வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை கொல்வது யார்? பாகிஸ்தான்
    தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம்- பிரதமர் மோடி தீவிரவாதிகள்
    இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது? இஸ்ரேல்
    பதுங்கு குழிகளில் தஞ்சம் அடையும் இஸ்ரேல் வாழ் மலையாளிகள் இஸ்ரேல்

    பாதுகாப்பு துறை

    மத்திய பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானங்கள் விமானம்
    இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இந்தியா
    நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் தர்மேந்திராவின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மும்பை
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025