Page Loader
'வேறு யாரையோ தேர்ந்தெடுக்க முயற்சி':இந்தியத் தேர்தல்களில் USAID தலையீடு இருப்பதாக டிரம்ப் தகவல்
முன்னாள் நிர்வாகம் இந்தியாவில் தேர்தல் தலையீட்டில் ஈடுபட்டதாக சூசகமாக தெரிவித்துள்ளார் டிரம்ப்

'வேறு யாரையோ தேர்ந்தெடுக்க முயற்சி':இந்தியத் தேர்தல்களில் USAID தலையீடு இருப்பதாக டிரம்ப் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2025
09:43 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது முன்னோடியான ஜோ பைடனின் முன்னாள் நிர்வாகம் இந்தியாவில் தேர்தல் தலையீட்டில் ஈடுபட்டதாக சூசகமாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் எலான் மஸ்க் தலைமையிலான DOGE துறை முன்மொழிந்த, வாக்குப்பதிவை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவிற்கு வழங்கப்பட்ட $21 மில்லியன் மானியத்தைக் குறைத்தார். அதன் பின்னரே அவரின் இந்த கருத்து வந்துள்ளது. மியாமியில் நடந்த சவுதி அரேபியா அரசாங்க ஆதரவுடன் கூடிய FII முன்னுரிமை உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப்,"இந்தியாவில் வாக்காளர் எண்ணிக்கைக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை செலவிட வேண்டும்? அவர்கள் (பிடன் நிர்வாகம்) வேறு யாரையாவது தேர்ந்தெடுக்க முயற்சி செய்தார்கள் என்று நினைக்கிறேன். இந்திய அரசாங்கத்திடம் நாம் சொல்ல வேண்டும். இது ஒரு முழுமையான திருப்புமுனை" என்றார்.

ஆதரவு 

DOGE துறை முன்மொழிந்த திட்டத்திற்கு டிரம்ப் ஆதரவு

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அரசாங்க செலவினங்களை மேற்பார்வையிடவும் குறைக்கவும் நிறுவப்பட்ட DOGE, ஞாயிற்றுக்கிழமை, பட்ஜெட் மறுசீரமைப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக வெளிநாட்டு உதவி நிதியில் $723 மில்லியனைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியது. இந்த நிதியில் இந்தியாவிற்கான $21 மில்லியன் மானியமும், பங்களாதேஷின் அரசியல் நிலப்பரப்பை வலுப்படுத்துவதற்கான $29 மில்லியன் திட்டமும் அடங்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக கட்டணங்களைக் கருத்தில் கொண்டு அத்தகைய நிதி உதவியின் அவசியத்தை அவர் கேள்வி எழுப்பி, DOGE-யின் முன்மொழிவிற்கு தனது ஆதரவை அவர் தெரிவித்தார். அமெரிக்கா அதிபராக அவர் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு, ஜனாதிபதி டிரம்ப் அனைத்து வெளிநாட்டு உதவிகளையும் கிட்டத்தட்ட முழுமையாக முடக்க உத்தரவிட்டார். அதில் இந்த நடவடிக்கையும் ஒன்று