பணிப்பெண் கொடுமைபடுத்திய விவகாரம்: பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஆந்திராவில் கைது
நீட் தேர்விற்கு படிப்பதற்காக, வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த சிறுமியை கொடுமைப்படுத்திய புகாரில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை ஆந்திராவில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் மற்றும் இவரது மனைவி மெர்லினா, இவர்கள் வீட்டில் பணிபுரிந்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த பட்டியலின பெண் ரேகாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக MLA கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் இருவர் மீதும் 6-பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் தலைமறைவான நிலையில், அவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்தது தமிழக காவல்துறை. இந்த நிலையில்தான், இவர்களை ஆந்திராவில் கைது செய்துள்ளது காவல்துறை.