NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஃபெஞ்சல் புயல் எதிரொலி; மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 10 வரை நீட்டிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபெஞ்சல் புயல் எதிரொலி; மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 10 வரை நீட்டிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
    மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 10 வரை நீட்டிப்பு

    ஃபெஞ்சல் புயல் எதிரொலி; மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 10 வரை நீட்டிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 01, 2024
    08:41 am

    செய்தி முன்னோட்டம்

    ஃபெஞ்சல் புயல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் பல மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் கனமழையைக் கொண்டு வந்து, அன்றாட வாழ்க்கையைப் பாதித்தது.

    தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் அயராது உழைத்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார்.

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ரிப்பன் பில்டிங்கில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிலைமையை கண்காணித்தார்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பிற அதிகாரிகள் களத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இதற்கிடையே, கனமழையால் சென்னையின் சில பகுதிகளிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மின்தடை ஏற்பட்டுள்ளது.

    காலக்கெடு

    காலக்கெடுவை நீட்டிப்பதாக அறிவிப்பு

    மின்கம்பங்கள் மற்றும் மரக்கிளைகள் வேரோடு சாய்ந்ததால், மின்துறையினர் விரைந்து சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காக, இந்த மாவட்டங்களில் மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

    இதன் மூலம் பொதுமக்கள் அபராதம் இல்லாமல் டிசம்பர் 10 வரை கட்டணம் செலுத்த முடியும்.

    பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் மின் இணைப்புகள் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, சென்னையில் பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கி, போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த டிசம்பர் 10ம் தேதி
    வரை காலநீட்டிப்பு.#TNEB pic.twitter.com/q2eBcu3vLR

    — TANGEDCO Official (@TANGEDCO_Offcl) November 30, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மின்சார வாரியம்
    செந்தில் பாலாஜி
    கனமழை
    தமிழக அரசு

    சமீபத்திய

    இந்திய சிஎன்ஜி வாகன சந்தையில் அறிமுகமாகும் சிட்ரோயன்; சி3  ஹேட்ச்பேக்கிற்கான சிஎன்ஜி கிட் வெளியீடு சிட்ரோயன்
    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான பரிசுத் தொகை அறிவிப்பு; 3வது இடம் பிடித்த இந்தியாவிற்கு எவ்வளவு? டெஸ்ட் சாம்பியன்ஷிப்
    மே 17ஆம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மண்டல வானிலை மையம் கனமழை
    தொடர்ந்து அபத்தமாக உளறும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்: '0 வரி கட்டணங்கள்' எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்கிறார் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    மின்சார வாரியம்

    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் சென்னை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 12) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 13) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    செந்தில் பாலாஜி

    தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கும் அமலாக்கத்துறை  அமலாக்க இயக்குநரகம்
    செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன்
    4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடரும் அமலாக்கத்துறையினரின் விசாரணை அமலாக்க இயக்குநரகம்
    செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு நீதிமன்ற காவல்

    கனமழை

    கோவையில் குறைந்த மழை வெள்ளம்: பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் கோவை
    கனமழை எதிரொலி: மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி மாணவர்கள்
    9 மாவட்டங்களில் தொடரும் கனமழை; பள்ளிகள் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு மழை
    சென்னைக்கு 2 நாட்கள் 'ரெட்' அலர்ட்! வானிலை மையம் அறிவிப்பு சென்னை

    தமிழக அரசு

    பொதுத்துறை நிறுவனங்கள் வருவாய் ரூ.1.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு தமிழகம்
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு உறுதி; அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி
    முறைகேடுகளை தவிர்ப்பதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு குழுக்களை அமைக்கிறது பள்ளிக் கல்வித்துறை பள்ளிக்கல்வித்துறை
    சென்னையில் புதிதாக 118 ஏக்கர் பரப்பில் பசுமைவெளி பூங்கா அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025