Page Loader
தெற்கு ஆந்திர கடற்கரையை கடந்தது மிக்ஜாம் புயல் 
சென்னையில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு ஆந்திர கடற்கரையை கடந்தது மிக்ஜாம் புயல் 

எழுதியவர் Sindhuja SM
Dec 05, 2023
05:45 pm

செய்தி முன்னோட்டம்

ஆந்திராவின் பாபட்லாவுக்கு அருகில் உள்ள நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டினத்திற்கும் இடையே பிற்பகல் 12:30 மணியிலிருந்து தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கிய மிக்ஜாம் புயல், பிற்பகல் 2:30 மணியளவில் கரையை கடந்தது. இதனால், கடந்த இரண்டு மணி நேரத்தில் ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. மிக்ஜாம் புயலின் தாக்கத்தை சமாளிக்க ஆந்திர கடற்கரையில் மொத்தம் 29 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மழை தொடர்பான சம்பவங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் போது, 100 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

டவ்க்க்ஜ்

வெள்ளத்தில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்பு 

புயல் அடித்து ஓய்ந்ததை அடுத்து, தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் நிவாரண பணிகள் தொடர்ந்து வருகின்றன. சென்னையில் மீன்பிடி படகுகள் மற்றும் பண்ணை டிராக்டர்களில் பணியாளர்கள் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சென்னையில் 11 பேர் மழை தொடர்பான பல்வேறு சம்பவங்களில் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பல மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகரின் புறநகரில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில், 54 குடும்பங்கள் மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பமான ஒரு பெண் சாலிகிராமத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டார். தாழ்வான பகுதிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கோட்டூர்புரத்தில் உள்ள பள்ளி முகாமில் தஞ்சம் அடைந்தனர்.