NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக 
    இன்னொரு தென் மாநிலத்திலும் தனது கால்தடத்தை பாதிக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

    தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 30, 2023
    08:08 am

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானாவை ஆளும் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி, ஒரு தென் மாநிலத்தில் தனது ஆட்சியை விரிவுபடுத்த பாஜக முயற்சித்து வரும் நிலையில், இன்று தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இதற்கிடையில், இன்னொரு தென் மாநிலத்திலும் தனது கால்தடத்தை பாதிக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

    தெலுங்கானாவில் இரண்டு முறை முதலமைச்சராக இருந்த கே.சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சி, சமூக நலத் திட்டங்களால் மக்களின் மனதை கவர்ந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக போராடி வருகிறது.

    2014இல் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலத்தை நிறுவியது பிஆர்எஸ் கட்சியாகும்.

    எனவே, அதற்கான விசுவாசத்தையும் மக்கள் இந்த தேர்தலில் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் பிஆர்எஸ் உள்ளது.

    டக்ஜ்வ்

     எந்தெந்த கட்சிகள் கூட்டணி சேரும்?

    இந்நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெரும்பான்மையை பெற்று சமீபத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், அதன் புதிய இளம் தலைவர் ரேவந்த் ரெட்டியின் தலைமையில் தெலுங்கானாவிலும் வென்று விட வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளது.

    பிஆர்எஸ் தலைவரும் தெலுங்கானாவின் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவின் கட்சி மீது பாஜக தலைமையிலான மத்திய அரசு பெரும் ஊழல் புகார்களை முன்வைத்திருக்கிறது.

    ஆனால், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதாவின் பெயர் இருந்தபோதிலும், அவர் கைது செய்யப்படாததை சுட்டி காட்டி இருக்கும் காங்கிரஸ், பாஜகவும் பிஆர்எஸும் கூட்டணி சேர்ந்து கொண்டு சதி செய்வதாக தெரிவித்திருந்தது.

    அதனால், ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெறாத நிலையில் எந்தெந்த கட்சிகள் கூட்டணி சேரும் என்பதும் பெரும் புதிராகவே உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    இந்தியா
    காங்கிரஸ்
    பாஜக

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து முதல் அமைச்சர்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது டெல்லி
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா

    இந்தியா

    ஒடிசா முதலமைச்சரின் வாரிசாகிறாரா ஒரு தமிழர்? முறையாக நவீன் பட்நாயக்கின் கட்சியில் சேர்ந்தார் வி.கே.பாண்டியன் ஒடிசா
    காந்தாரா அத்தியாயம்1 டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது கன்னட படங்கள்
    இந்திய தூதரை வழி மறித்து தகராறு செய்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்: நியூயார்க்கில் பரபரப்பு  அமெரிக்கா
    ஆப்பிளின் இலக்கை எட்ட ஓசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆப்பிள்

    காங்கிரஸ்

    'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு  திமுக
    குடியரசு தலைவரின் ஜி20 விருந்திற்கு மல்லிகார்ஜுன கார்கே அழைக்கப்படவில்லை - பா.சிதம்பரம் கண்டனம்  இந்தியா
    கர்நாடகா மாநிலத்தில் பாஜக'வினர் போராட்டத்தினை கலைத்த தேனீக்கள் பாஜக
    நூஹ் வன்முறை: காங்கிரஸ் எம்.எல்.ஏ-வை கைது செய்தது ஹரியானா போலீஸ் ஹரியானா

    பாஜக

    என்.டி.ஏ. கூட்டணியிலிருந்து வெளியேறிய பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி  ஆந்திரா
    பாஜக கூட்டணியில் இருந்து விலகவில்லை - பவன் கல்யாண் விளக்கம்  ஆந்திரா
    புதுச்சேரியின் ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா ராஜினாமா - காரணம் என்ன? புதுச்சேரி
    காவிரி விவகாரம் - தமிழக பாஜக சார்பில் அக்.,16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் அண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025