NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் புதிதாக 118 ஏக்கர் பரப்பில் பசுமைவெளி பூங்கா அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் புதிதாக 118 ஏக்கர் பரப்பில் பசுமைவெளி பூங்கா அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு
    சென்னை கிண்டியில் பசுமைவெளி பூங்கா அமைக்க தமிழக அரசு ஆணை

    சென்னையில் புதிதாக 118 ஏக்கர் பரப்பில் பசுமைவெளி பூங்கா அமைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 23, 2024
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் 118 ஏக்கர் பரப்பளவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பசுமைவெளி பூங்கா அமைத்திட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு:-

    சென்னை, கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கம் (Creation of Public Horticultural Garden, Public Green Spaces and Public Utilities) செய்திட தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

    சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் 160.86 ஏக்கர் நிலம் 1.4.1945 ஆம் தேதி முதல் 99 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

    நிலக் குத்தகை ரத்து

    கிண்டி ரேஸ் கிளப் நிலக் குத்தகை ரத்து

    அரசிடமிருந்து கிண்டி ரேஸ் கிளப் நிருவாகத்திற்கு வழங்கப்பட்ட இந்த நிலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதால் தமிழ்நாடு அரசு குத்தகையை ரத்து செய்து, இந்த நிலத்தினை மீளப்பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டிற்காக உருவாக்கம் செய்யப்படவுள்ளது.

    எனவே, கிண்டியில் நிலக் குத்தகை ரத்து செய்யப்பட்டு அரசு சுவாதீனம் (possession) செய்யப்பட்ட நிலத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அமைப்பதற்காக, அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் ரூபாய் 4832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தைத் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் நிலமாற்ற கோரிக்கையினை ஏற்று, அத்துறைக்கு நிலமாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

    பசுமை நிலப் பகுதி

    சென்னையில் தனி மனிதருக்கான பசுமை நிலப் பகுதி குறைவு

    சென்னை மாநகரம் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 86.9 இலட்சம் மக்கள்தொகை கொண்டதாகவும், சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப் பகுதி (Per capita green cover) 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது.

    மேலும் சென்னைப் பெருநகரின் பசுமை வெளியானது, வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் பரப்பில் வெறும் 6.7 சதவீதமாகத் தான் உள்ளது.

    இது பிற இந்திய மாநகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும்.

    ஆகவே, சென்னையின் பசுமைப் பகுதியை அதிகரிக்க வேண்டிய தேவையின் அடிப்படையிலும், சென்னை நகரமயமாக்குதலால், மக்கள் தொகை அடர்த்தி மற்றும் மக்கள் தொகை பெருகிவரும் சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பூங்காக்கள் மற்றும் பசுமைவெளிகளை உருவாக்க வேண்டியது அத்தியாவசியமாகியுள்ளது.

    பூங்கா

    புதிய பூங்காக்கள் உருவாக்கம்

    சென்னைவாழ் மக்கள் தங்கள் உடல்நலனிற்காகவும், உடற்பயிற்சிக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் போதுமான பொது இடங்களை உருவாக்க வேண்டிய நோக்கத்துடன், நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள பசுமையான சூழலைக் கொண்ட பூங்காக்கள் அவசியம் ஆகும்.

    ஆகவே, இதுவரை பூங்காக்கள் அமைக்கப்படாத இடங்களில் புதிய பூங்காக்களை உருவாக்க வேண்டியுள்ளது.

    சென்னை நகரில் ஒரு பெரிய அளவிலான பூங்காவினை உருவாக்குவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துகிறது.

    மேலும், சென்னை நகரத்தில் வசிப்பவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கு ஏராளமான நன்மைகளை உருவாக்கிடவும், பசுமையான டெங்களை உருவாக்கி, பொதுப் பூங்காக்களைப் பராமரிப்பதன் மூலம் எதிர்காலச் சந்ததியினரை பாதுகாப்பதிலும் அரசின் முக்கியப் பங்கு உள்ளது.

    நன்மைகள்

    பூங்காக்களின் நன்மைகள்

    பூங்காக்கள் மக்களின் உடல், மனநல ஆரோக்கியத்துக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கின்றன:

    மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றைக் குறைத்து மனதுக்கு அமைதியைத் தருபவை பூங்காக்கள்.

    உடல்பயிற்சிகளை ஊக்குவிக்கவும், அமர்ந்த நிலையிலேயே அதிக நேரத்தைச் செலவிடும் வாழ்வியல் சூழலில் ஆரோக்கியம் பேணவும் பூங்காக்கள் கைகொடுக்கும். சிறார்கள் ஓடியாடி விளையாடுவதற்குப் போதுமான இட வசதியை அளிக்கும்.

    சுத்தமான காற்றைத் தரும், ஆரோக்கியமான சமுதாயம் அமைந்திட உதவும்.

    வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும், நகரத்தின் வெப்பமான சூழலைத் தணிக்கும் மற்றும் வெள்ளப் பாதிப்பினை குறைக்கும்.

    மக்கள் நெருக்கம் மிகுந்த சென்னையில், உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான சுத்தமான காற்றை வழங்கும் பூங்காக்கள் மக்கள் ஒன்று கூடவும், அவர்களின் உடல், மன நல ஆரோக்கியத்தைப் பேணவும், அத்துடன் சுற்றுச்சூழலைச் சீராகப் பராமரிக்கவும் உதவும்.

    சுற்றுச்சூழல் பூங்கா

    கிண்டியில் சுற்றுச்சூழல் பூங்கா

    மாநகரத்தின் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஈடுகொடுத்திடும் வகையில் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றினை சென்னையின் மத்திய பகுதியான கிண்டியில் நிறுவுதல் மிக அவசியமானது.

    இங்கு அமைக்கப்படவுள்ள பூங்காவானது, மக்களது மன மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும், ஓய்வுக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மெருகேற்றுவதற்கும் வழிவகுக்கும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சென்னையின் சுற்றுச்சூழலைப் பேணும் வகையில் ஏற்கனவே தனியார் அமைப்புகளிடம் இருந்த அரசு நிலங்களை மீட்டு தோட்டக்கலைத் துறையின் மூலம் சென்னை, கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவும், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஒரு பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது.

    அதேபோல், தற்போது சென்னை, கிண்டியில் மிகப் பெரிய பரப்பளவில் உருவாக்கப்பட உள்ள இந்த பூங்கா, பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழ்நாடு அரசு ஆணை

    சென்னை, கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உருவாக்கிட தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு#CMMKSTALIN #TNDIPR @CMOTamilnadu @mkstalin@mp_saminathan @MRKPanneer pic.twitter.com/OFapKVCeCc

    — TN DIPR (@TNDIPRNEWS) September 22, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழக அரசு
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    சென்னை

    தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக உயர்த்துவோம்: முதலைமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் முதல் அமைச்சர்
    பிரமாண்டமாக நிறைவடைந்த சென்னை Formula 4 கார் பந்தயம்: வெற்றியாளர்கள் விவரம் உதயநிதி ஸ்டாலின்
    சென்னை மெட்ரோவில் ஆகஸ்டில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அதிகரிப்பு மெட்ரோ
    அம்மா உணவகங்களுக்கான இ-பில்லிங் இயந்திரங்கள் வாங்க டெண்டர் அறிவிப்பு தமிழகம்

    தமிழக அரசு

    தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்; ஆகஸ்ட் 31 பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்  வந்தே பாரத்
    தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது! தமிழ்நாடு
    புத்தக பிரியர்கள் கவனத்திற்கு, மதுரையில் செப்.,6 ஆம் தேதி முதல் புத்தக திருவிழா தொடக்கம் புத்தக கண்காட்சி
    பொதுமக்கள் கவனத்திற்கு, ஆகஸ்ட் 31 வழக்கம் போல அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் தமிழகம்

    தமிழ்நாடு

    3 நிறுவனங்கள், ரூ.850 கோடி முதலீட்டிற்கான MOUகள்: முதலமைச்சர் ஸ்டாலினின் சிகாகோ பயண ஹைலைட்ஸ் முதலீடு
    ஆன்லைன் முன்பதிவில் புதிய சாதனை படைத்த SETC: ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேலானோர் முன்பதிவு போக்குவரத்து
    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடும் மக்கள் விநாயகர் சதுர்த்தி
    ஆன்லைன் புக்கிங் வசதி எப்படி இருக்கு? பொதுமக்களின் கருத்துக்களை கோரும் அரசு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாடு செய்தி

    சிகாகோவில் செம கேஷுவலாக சைக்கிள் ஓட்டும் தமிழக முதல்வர்  தமிழக முதல்வர்
    விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு ஓய்வூதியம்
    சென்னையில் மூன்று புதிய மின்சார ரயில்கள்; தென்னக ரயில்வே அறிவிப்பு சென்னை
    ஒகேனக்கல்லில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மீண்டும் தடை காவிரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025