NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்
    சென்னையிலிருந்து வெளியூர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    வார இறுதியில் சிறப்பு பேருந்துகள்; சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு குட் நியூஸ்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 20, 2025
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    வார இறுதியில் பயணிகளின் வசதிக்காக, பிப்ரவரி 21, 22 மற்றும் 23இல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை ஈடுசெய்ய வழக்கமான சேவைகளுக்கு கூடுதலாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி. சென்னையின் கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களிலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பிப்ரவரி 21 ஆம் தேதி 245 பேருந்துகளும், அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

    விபரங்கள்

    கூடுதல் விபரங்கள்

    கூடுதலாக, பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூருக்கு 51 பேருந்துகள் இயக்கப்படும்.

    மேலும், பிப்ரவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாதவரத்திலிருந்து தலா 20 பேருந்துகளுடன் சிறப்பு சேவைகளும் கிடைக்கும்.

    பிப்ரவரி 23 ஞாயிற்றுக்கிழமை திரும்பும் பயணத்தை எளிதாக்க, பயணிகளின் தேவைக்கேற்ப பல்வேறு நகரங்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

    நெரிசலைத் தவிர்க்க பயணிகள் டிஎன்எஸ்டிசி வலைத்தளம் (www.tnstc.in) அல்லது மொபைல் செயலி மூலம் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

    அனைத்து முக்கிய பேருந்து முனையங்களிலும் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும் பயணிகளுக்கு உதவவும் டிஎன்எஸ்டிசி போதுமான அதிகாரிகளை நியமித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிறப்பு பேருந்துகள்
    சென்னை
    தமிழ்நாடு செய்தி
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சிறப்பு பேருந்துகள்

    திருவண்ணாமலை கார்த்திகை தீபம் திருநாள் - 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் திருவண்ணாமலை
    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 640 சிறப்பு பேருந்துகள் இயக்கம் பண்டிகை
    கோவை விழாவை முன்னிட்டு டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம் கோவை
    தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போனீங்களா? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு தீபாவளி

    சென்னை

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 6) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    சென்னை மாநகர பேருந்துகளில் இன்று முதல் வரும் சூப்பர் மாற்றம்: ஸ்மார்ட் அட்டை மூலம் எளிதாகும் பயணம் பேருந்துகள்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 7) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: விவரங்கள் பொங்கல்

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 28) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தைப்பூசத்தின்போது பழனிக்கு மட்டும் பாதயாத்திரை மேற்கொள்வது ஏன்? வரலாற்று பின்னணியும் நம்பிக்கையும் பழனி
    அரசு பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து அரசு பள்ளி
    தொழிலார்களுக்கு வெற்றி; சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்தது தொழிலாளர் நலத்துறை சாம்சங்

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடுக்கு மத்திய அரசு கண்டனம் மீனவர்கள்
    நான்கு தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் கணிப்பு கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 30) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025