NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
    வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு

    அடுத்து இரண்டு நாட்களுக்கு வெயில் பொளக்கப் போகுது; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 20, 2025
    01:35 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையின்படி, இன்று (பிப்ரவரி 20) மற்றும் நாளை மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

    சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

    மேலும், காலை நேரங்களில் லேசான மூடுபனி காணப்பட வாய்ப்புள்ளது.

    பிப்ரவரி 22 முதல் 26 வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் முழுவதும் வறண்ட வானிலை தொடரும் என்று வானிலை முன்னறிவிப்பு மேலும் கூறுகிறது.

    இந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2-4° செல்சியஸ் அதிகமாக இருக்கலாம்.

    சென்னை

    சென்னை மாநகரத்திற்கான வானிலை அறிக்கை

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    காலை வேளையில் லேசான மூடுபனி காணப்படலாம். வெப்பநிலை அதிகபட்சமாக 32-33° செல்சியஸ் அளவிற்கும், குறைந்தபட்சமாக 22-23° செல்சியஸ் அளவிற்கும் இடையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கோடைகாலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில், வெப்பநிலை அதிகரித்து வருவதால், மக்கள் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை அறிக்கை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் கொரோனா
    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு

    வானிலை எச்சரிக்கை

    வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு?  வானிலை அறிக்கை
    மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை கனமழை
    டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை; திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிகளுக்கு விடுமுறை
    வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி உருவானது: 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு மழை

    வானிலை எச்சரிக்கை

    வங்கக்கடலில் சனிக்கிழமை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; நவம்பர் 26 - 28 வரை தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் காற்றழுத்த தாழ்வு நிலை
    வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் நாளை நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலை எச்சரிக்கை
    வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் தமிழகம்
    மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம் வானிலை ஆய்வு மையம்

    வானிலை அறிக்கை

    சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்
    கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை
    வங்கக்கடலில் இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்; 25 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை புயல் எச்சரிக்கை
    கடலூர்- சென்னை அருகே நவம்பர் 30ஆம் தேதி கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்; தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது இதுதான் புயல் எச்சரிக்கை

    வானிலை ஆய்வு மையம்

    வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்; உறுதிப்படுத்திய வானிலை ஆய்வு மையம்  புயல் எச்சரிக்கை
    ஃபெஞ்சல் புயல் எதிரொலி; தமிழகத்தில் 9 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை
    ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதிக மழையை எதிர்கொள்ளும் வட தமிழகம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் வானிலை எச்சரிக்கை
    இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழைதான்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கனமழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025