NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு; சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வாய்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு; சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வாய்ப்பு
    ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

    தமிழகத்தின் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு; சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வாய்ப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jan 05, 2025
    09:06 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தின் 2019 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் (ஜனவரி 5, 2025) முடிவடைகிறது.

    புதிய தேர்தல்கள் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாத நிலையில், உள்ளாட்சி நிர்வாகத்தை தற்காலிகமாக நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக ஒன்பது புதிய மாவட்டங்களை உருவாக்கிய அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்திருத்தம் காரணமாக கிராம உள்ளாட்சித் தேர்தல்கள் வெவ்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன.

    ஆரம்பத்தில் 28 மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது, மீதமுள்ள மாவட்டங்களில் வார்டு வரையறை முடிந்த பிறகு தேர்தல்கள் நடந்தன.

    இந்த வெவ்வேறு கட்ட செயல்முறை உள்ளூர் நிர்வாகத்தின் முழு செயல்பாட்டை தாமதப்படுத்தியது.

    மசோதா

    சிறப்பு அதிகாரிகளை நியமிக்க மசோதா

    மாநில தேர்தல் ஆணையம் (SEC) பொதுவாக பதவியில் இருப்பவரின் பதவிக்காலம் முடிவதற்கு 45 நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்புகளை வெளியிடும்.

    ஆனால், அதுபோன்ற அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், ஊரக உள்ளாட்சி நிர்வாகம் தொடர்வது கவலை அளிக்கிறது.

    முந்தைய நிகழ்வுகளைப் போலவே, புதிய தேர்தல்கள் நடைபெறும் வரை உள்ளாட்சி நிர்வாகத்தை மேற்பார்வையிட சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படலாம்.

    நாளை (ஜனவரி 6, 2025) தொடங்கும் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், இதில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சிறப்பு அதிகாரிகள் நியமனத்தை முறைப்படுத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    தமிழக அரசு
    தேர்தல்

    சமீபத்திய

    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா
    இந்தியாவின் மே மாத ஜிஎஸ்டி வசூல் 16.4 சதவீதம் வளர்ச்சி; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி

    தமிழ்நாடு

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ் பேராசிரியர் ஏ.ஆர். வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து விருது
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரளாவிற்கு 3 நாள் கெடு பசுமை தீர்ப்பாயம்

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தமிழ்நாட்டில் 5 IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்தில் இருவர் பலி; மீட்பு பணி தீவிரம் விபத்து

    தமிழக அரசு

    தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் தொகுப்பு விற்பனை தமிழகம்
    சென்னையில் 'பிங்க் ஆட்டோக்கள்' திட்டம்; பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு சென்னை
    ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவைகள்; தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அறிவிப்பு ரேஷன் கடை
    தமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்: தமிழக அரசின் புதிய திட்டம் தமிழ்நாடு

    தேர்தல்

    டொனால்ட் டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: அமெரிக்க ஜனாதிபதி விவாதத்தில் என்ன எதிர்பார்க்கலாம்? டொனால்ட் டிரம்ப்
    42 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரின் தோடா பகுதிக்கு சென்ற முதல் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல் ஒரே நாடு ஒரே தேர்தல்
    இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை; தேர்தல் விதிமுறை சொல்வது என்ன? இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025