NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பஞ்சாயத்து நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஞ்சாயத்து நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தகவல்
    பஞ்சாயத்து நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம்

    பஞ்சாயத்து நிர்வாகத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு அறிக்கையில் தகவல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 17, 2025
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, பஞ்சாயத்து அளவிலான நிர்வாகத்தை செயல்படுத்துவதிலும், அதிகாரங்களை பரவலாக்குவதிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளது.

    கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதாக, இந்த அங்கீகாரம் குறித்து மாநில அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாராட்டு தெரிவித்தது.

    மாநில வாரியாக பஞ்சாயத்து அதிகாரங்களை பரவலாக்கம் - சான்றுகள் அடிப்படையிலான தரவரிசை என்ற தலைப்பில் அறிக்கை மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் அவர்களால் பிப்ரவரி 13 அன்று வெளியிடப்பட்டது.

    தரவரிசைகள் கட்டமைப்பு, செயல்பாடு, நிதி மேலாண்மை, பிரதிநிதித்துவம், திறன் மேம்பாடு மற்றும் பொறுப்புணர்வு ஆகிய ஆறு முக்கிய குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது.

    பஞ்சாயத்து பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுதல் மற்றும் பரவலாக்கப்பட்ட திட்டமிடல் ஆகியவற்றிற்காக தமிழ்நாடு முதல் இடத்தை பெற்றுள்ளது.

    தரவரிசை

    பிற தரவரிசைகளில் தமிழகத்தின் இடம்

    குறிப்பிட்ட வகைகளில், தமிழ்நாடு திறன் மேம்பாடு மற்றும் செயல்பாட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் நிதி பரிவர்த்தனைகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

    ஒட்டுமொத்தமாக, பஞ்சாயத்து செயல்திறனின் தேசிய தரவரிசையில் மாநிலம் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது கிராம நிர்வாகத்தில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    கூடுதலாக, உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பயிற்சித் தேவைகளை மதிப்பிடுவதிலும், திறன்-வளர்ப்பு திட்டங்களை நடத்துவதிலும் மாநிலம் சிறந்து விளங்குகிறது.

    தமிழ்நாட்டின் உள்ளாட்சி நிர்வாகத்திற்கான பயிற்சி நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு மத்திய அரசின் அறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அங்கீகாரம், கட்டமைக்கப்பட்ட பயிற்சி, நிதி மேலாண்மை மற்றும் கொள்கை செயலாக்கம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் கிராமப்புற நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான தமிழகத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    மத்திய அரசு
    தமிழகம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    தமிழ்நாடு

    பாலியல் வழக்குகளுக்கு தண்டனையை கடுமையாகும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் ஆர்.என்.ரவி
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    வேங்கை வயல் சம்பவத்தில் அவதூறு பரப்ப வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தல் வேங்கை வயல்
    ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து நிகழ்வில் பங்கேற்பில்லை; திமுக அறிவிப்பு குடியரசு தினம்

    தமிழ்நாடு செய்தி

    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 22) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    76வது குடியரசு தினம்: சென்னையில் தேசிய கொடியை பறக்கவிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தினம்

    மத்திய அரசு

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு 2 இடங்களை தேர்வு செய்துள்ள மத்திய அரசு மன்மோகன் சிங்
    மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதா? வெளியுறவு அமைச்சகம் நிராகரிப்பு மாலத்தீவு
    டிஜிட்டல் பர்சனல் டேட்டா பாதுகாப்பு வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு இந்தியா
    இந்தியாவில் 18 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தக் கட்டுப்பாடு? வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு சமூக ஊடகம்

    தமிழகம்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; 65 பேர் போட்டியிட விண்ணப்பம் இடைத்தேர்தல்
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 20) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார் திமுக
    ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்; கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை இடைத்தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025