NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும்; 1971 ஒப்பந்தத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும்; 1971 ஒப்பந்தத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்
    1971 ஒப்பந்தத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

    பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும்; 1971 ஒப்பந்தத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 17, 2024
    11:50 am

    செய்தி முன்னோட்டம்

    1971க்கு முன்னர் மாநிலத்திற்கு வந்த பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் அசாம் ஒப்பந்தத்தை அங்கீகரித்த முக்கிய குடியுரிமை விதி செல்லும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

    1966-1971க்கு இடையில் இந்திய குடிமக்களாக பதிவு செய்ய அப்போது கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்ட பங்களாதேஷில் இருந்து அகத்தில் இந்தியாவிற்குள் நுழைந்தனர்.

    இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 4:1 என்ற பெரும்பான்மையில் இதற்கான சட்டப் பிரிவான 6ஏ பிரிவை உறுதி செய்தது.

    பங்களாதேஷ் அகதிகளின் வருகை அசாமின் மக்கள்தொகை சமநிலையை பாதித்துள்ளது என்று வாதிட்ட மனு மீது இந்த உத்தரவு வந்தது.

    தீர்ப்பு

    தீர்ப்பின் முழு விபரம்

    தீர்ப்பைப் படித்த தலைமை நீதிபதி, அகதிகள் வருகையால் அசாம் எதிர்கொள்ளும் தனித்துவமான பிரச்சனைக்கு 6ஏ பிரிவின் சட்டம் ஒரு அரசியல் தீர்வு என்று கூறினார்.

    மேலும், "மத்திய அரசு இந்தச் சட்டத்தை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியிருக்கலாம். ஆனால் அது அசாமுக்கு மட்டுமே உரியது என்பதால் அவ்வாறு செய்யவில்லை.

    அசாமில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றின் தாக்கம் அசாமில் அதிகம்.

    மேற்கு வங்காளத்தில் உள்ள 57 லட்சத்தை விட அசாமில் உள்ள 40 லட்சம் புலம்பெயர்ந்தோரின் தாக்கம் அதிகம். ஏனெனில் அசாமின் நிலப்பரப்பு மேற்கு வங்காளத்தை விட குறைவாக உள்ளது." என்று தலைமை நீதிபதி கூறினார்.

    எனினும், மார்ச் 25, 1971க்குப் பிறகு அசாமில் குடியேறியவர்களுக்கு இந்தத் தீர்ப்பு பொருந்தாது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    அசாம்
    இந்தியா
    குடியுரிமை (திருத்த) சட்டம்

    சமீபத்திய

    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

    உச்ச நீதிமன்றம்

    சினிமாவில் மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவத்திற்கான வழிகாட்டுதல்: உச்ச நீதிமன்றம் வெளியீடு சினிமா
    விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்கள் கணவரிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் இந்தியா
    NEET-UG வினாத்தாள் கசிவு இன்று விசாரணை: மறுதேர்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடுமா?  நீட் தேர்வு
    NEET-UG 2024 விசாரணை: ஜூலை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா

    இந்தியா

    உலகிற்கே முன்னோடியாக உள்ள இந்தியாவின் உணவு நுகர்வு முறை; உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கையில் பாராட்டு உணவு பிரியர்கள்
    ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பு; இரண்டு நாள் பயணமாக லாவோஸ் கிளம்பினார் பிரதமர் மோடி நரேந்திர மோடி
    கிரெட்டாவிற்கு பிறகு மேலும் மூன்று எலக்ட்ரிக் கார்கள்; ஹூண்டாய் இந்தியா அதிரடி திட்டம் ஹூண்டாய்
    இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் 'மகாகாளி'யின் ஃபர்ஸ்ட்-லுக் காட்சி வெளியானது திரைப்படம்

    குடியுரிமை (திருத்த) சட்டம்

    இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம் மேற்கு வங்காளம்
    "தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்": முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை முதல் அமைச்சர்
    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்பு இந்தியா
    சிஏஏ குடியுரிமை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? சிஏஏ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025