NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா: அரசியல் சாசன அமர்வை கூட்டுகிறது உச்ச நீதிமன்றம் 
    தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா: அரசியல் சாசன அமர்வை கூட்டுகிறது உச்ச நீதிமன்றம் 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா: அரசியல் சாசன அமர்வை கூட்டுகிறது உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 12, 2023
    02:35 pm
    தேசத்துரோக சட்டம் நீக்கப்படுமா: அரசியல் சாசன அமர்வை கூட்டுகிறது உச்ச நீதிமன்றம் 
    கடந்த மாதம், இந்தியாவின் குற்றவியல் சட்டங்களை மாற்றும் நோக்கத்தோடு, மூன்று புதிய மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

    தேச துரோக சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. இந்த பிரச்சனையை ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த மனுக்களை மாற்ற பரிந்துரைத்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்பதை காரணம் காட்டிய மத்திய அரசின் உயர்மட்ட வழக்கறிஞர்கள், இந்த விசாரணையை ஒத்திவைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். கடந்த மாதம், இந்தியாவின் குற்றவியல் சட்டங்களை மாற்றும் நோக்கத்தோடு, மூன்று புதிய மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது.

    2/2

    புதிய மசோதாவில் சர்ச்சைக்குரிய தேசத்துரோகச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதா?

    இந்த புதிய மசோதாக்களில் இருந்து சர்ச்சைக்குரிய தேசத்துரோகச் சட்டம்(ஐபிசியின் பிரிவு 124 ஏ) ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு பதிலாக, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்(சட்டப்பிரிவு 150) என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், 'தேசத்துரோகச் சட்டம்' என்ற பெயர் மட்டும் தான் புதிய மசோதாவில் மாற்றப்பட்டுள்ளது என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த செயலை செய்தாலும் பேசினாலும் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று புதிய சட்டப்பிரிவு 150 கூறுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்

    இந்தியா

    விண்வெளியைத் தொடர்ந்து ஆழ்கடலை ஆய்வு செய்ய சமுத்திரயான் திட்டத்திற்கு தயாராகும் இந்தியா தொழில்நுட்பம்
    அலுவலகங்களை சுத்தம் செய்ததன் மூலம் ரூ.600 கோடி வருவாய் ஈட்டிய மத்திய அரசு மத்திய அரசு
    மணிப்பூரில் தீவிரவாத குழுக்களின் நடமாட்டம் அதிகரிப்பு: எச்சரிக்கை விடுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் மணிப்பூர்
    இந்தியாவின் RRVL நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை மேற்கொண்டிருக்கும் அமெரிக்காவின் KKR முதலீட்டு நிறுவனம் வணிகம்

    உச்ச நீதிமன்றம்

    இபிஎஸ்'க்கு எதிரான முறைகேடு வழக்கு - தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு எடப்பாடி கே பழனிசாமி
    சட்டம் பேசுவோம்: தேசத்துரோக சட்டம் என்றால் என்ன? அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்? இந்தியா
    காவிரிநீர் வழக்கு - செப் 21ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் தமிழ்நாடு
    இந்தியாவா? பாரதமா? 2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது? இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023