NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சட்டம் பேசுவோம்: தேசத்துரோக சட்டம் என்றால் என்ன? அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சட்டம் பேசுவோம்: தேசத்துரோக சட்டம் என்றால் என்ன? அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்?
    புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவதற்காக மக்களவையில் 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.

    சட்டம் பேசுவோம்: தேசத்துரோக சட்டம் என்றால் என்ன? அதற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்?

    எழுதியவர் Sindhuja SM
    Sep 10, 2023
    06:26 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டம் பேசுவோம்: தேசத் துரோகச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் விசாரிக்க உள்ளது.

    சமீபத்தில், புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றுவதற்காக மக்களவையில் 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.

    1860ஆம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்டத்திற்கு(IPC) மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா(BNS) என்ற சட்டத்தை இந்திய அரசு முன்மொழிந்தது.

    மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு(CrPC) மாற்றாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா-2023 என்ற மசோதாவும், இந்திய சாட்சியச் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய சாக்ஷ்ய-2023 என்ற மசோதாவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதனிடையே தற்போது தேசத் துரோகச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

    டோகிலை

    தேசத்துரோக சட்டத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சட்டப்பிரிவு 150

    தேசத் துரோகம் என்பதை வரையறுக்கும் விதிகள் IPCயின் சட்டப்பிரிவு 124Aவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மே 2022இல் உச்ச நீதிமன்ற வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து இந்த தேசத்துரோக சட்டத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. தேசத்துரோகச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் அப்போது அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கியது.

    இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி IPCக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா(BNS) என்ற சட்ட மசோதாவை இந்திய அரசு நாடுளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

    ஆனால், இந்த புதிய மசோதாவிலும் தேசத்துரோக சட்டத்தை ஒத்த சட்டப்பிரிவு 150 என்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த செயலை செய்தாலும் பேசினாலும் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று புதிய சட்டப்பிரிவு-150 கூறுகிறது.

    திக்னவ்ஜ்

    தேசத்துரோக சட்டம் என்றால் என்ன?

    தேசத்துரோகச் சட்டம் முதன்முதலில் 1837ஆம் ஆண்டில் தாமஸ் மெக்காலே என்பவரால் உருவாக்கப்பட்டது. மேலும், 1870ஆம் ஆண்டில் ஜேம்ஸ் ஸ்டீபன் என்பவர் தேசத்துரோகச் சட்டத்தை இந்திய தண்டனைச் சட்டத்தின்(IPC) பிரிவு 124Aஇல் சேர்த்தார்.

    இந்தியாவுக்கோ அல்லது இந்திய அரசாங்கத்திற்கோ எதிராக என்ன செய்தாலும் அது தேசத்துரோகமாக கருதப்படும்.

    பிரிட்டன் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர வீரர்கள் கொதித்தெழுந்து புரட்சி செய்த காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் தேசத்துரோகச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

    மகாத்மா காந்தி, அன்னி பெசன்ட் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை ஒடுக்குவதற்காகவே இந்த சட்டம் இயற்றப்பட்டது.

    IPCயின் சட்டப்பிரிவு 124Aயின் படி, "தேசத்துரோகம்" செய்தவர்களால் ஜாமீனில் வெளிவர முடியாது. தேசத்துரோகச் சட்டத்தை மீறினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, சில சமயங்களில் அபராதம் உள்ளிட்டவை விதிக்கப்படலாம்.

    டோஜிக்

    தேசத்துரோக சட்டத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்புகள்?

    "தேசத்துரோக" குற்றவாளி அரசு வேலையில் இருந்தால், அவரது அரசாங்க வேலை பறிக்கப்படும். மேலும், அவர் பாஸ்போர்ட் இல்லாமல் வாழ வேண்டி இருக்கும்.

    மொத்தத்தில், இந்த சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டால் அந்த நபரால் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் வாழ முடியாது.

    தேசத்துரோகச் சட்டத்திற்கு எதிராக பல விமர்சனங்கள் இதுவரை எழுந்துள்ளன.

    இது காலனித்துவ சட்டம் என்பதாலும், இது இந்தியர்களிடையே ஏற்பட்ட எழுச்சியை ஒடுக்க ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது என்பதாலும் பல சட்ட ஆர்வலர்கள் இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர்.

    எனினும், ஒரு சட்டத்தை ரத்து செய்வதற்கு இது சரியான காரணம் இல்லை என்று முன்பு சட்ட ஆணையம் தீர்ப்பளித்தது.

    தேசத்துரோக சட்டம், தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பாதுகாக்கிறது என்றும் சட்ட ஆணையம் கூறியது.

    ட்ஜ்வ்க்

    கருத்து வேறுபாடு என்ற சாக்குப்போக்கின் கீழ் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்கள் 

    ஆனால், மக்களாட்சியில் அரசாங்கத்தின் குரலை விட மக்களின் குரல் தான் ஓங்கி இருக்க வேண்டும் என்கின்றனர் விமர்சகர்கள்.

    அரசாங்கத்திற்கு எதிராக எது பேசினாலும் செய்தாலும் அது தேசத்துரோகமாக கருத்தப்பட்டால் அது பொது மக்களின் கருத்து சுதந்திரத்தை கடுமையாக பாதிக்கும்.

    அரசாங்கத்திற்கு எதிராக யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்றால் அது மக்களாட்சியாக இல்லாமல் சர்வாதிகாரமாக மாறிவிடும்.

    மேலும், தேசத்துரோகச் சட்டத்தை எளிதில் தவறாகப் பயன்படுத்த முடியும். கருத்து வேறுபாடு என்ற சாக்குப்போக்கின் கீழ் மக்கள் கைது செய்யப்படலாம்.

    எடுத்துக்காட்டாக, 2021ஆம் ஆண்டில், கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வென்றதைக் கொண்டாடியதற்காக மூன்று காஷ்மீரி முஸ்லிம் சிறுமிகள் தேசத்துரோக வழக்கில் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சட்டம் பேசுவோம்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா

    இந்தியா

    நுகர்வோர் ஒருவருக்கு ITC நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு, ஏன்? வணிகம்
    இந்தியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    வாடிக்கையாளரின் புகார் காரணமாக டைஜீன் மருந்தைத் திரும்பப் பெறும் அபாட் இந்தியா வணிகம்
    இந்தியா என்னும் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான செலவு குறித்து எம்.பி.சு.வெங்கடேசன்  ஜி20 மாநாடு

    சட்டம் பேசுவோம்

    சட்டம் பேசுவோம்: ஈவ் டீசிங்கிற்கு எதிரான இந்திய சட்டங்களின் பட்டியல் இந்தியா
    சட்டம் பேசுவோம்: புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்கள் இந்தியா
    சட்டம் பேசுவோம்: பதின் பருவ உடலுறவை குற்றமற்றதாக்குவது குறித்து விவாதிக்கும் உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    சட்டம் பேசுவோம்: திருமண-பலாத்காரத்திற்கு எதிராக இந்தியாவில் சட்டங்கள் இல்லையா? இந்தியா

    உச்ச நீதிமன்றம்

    அமலாக்கத்துறை தலைவரின் பதவி நீட்டிப்பு சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அமலாக்க இயக்குநரகம்
    செந்தில் பாலாஜி வழக்கு - புலன் விசாரணை குறித்து வாதம் செய்யும் அமலாக்கத்துறை  கைது
    அரசியலமைப்பின் 370வது பிரிவு: ஜம்மு காஷ்மீருக்கு என்ன நடந்தது? ஜம்மு காஷ்மீர்
    செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025