NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு

    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    May 16, 2025
    07:56 pm

    செய்தி முன்னோட்டம்

    மகாராஷ்டிராவின் தானேயில் 2013 ஆம் ஆண்டு மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

    வழக்கு விசாரணையில் ஏற்பட்ட கடுமையான குறைபாடுகள் மற்றும் விசாரணை குறைபாடுகளைக் காரணம் காட்டி, அந்த நபர் குற்றவாளி அல்ல என தீர்ப்பளிக்கப்பட்டார்.

    நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு தரப்பு நம்பகமான மற்றும் தொடர்ச்சியான ஆதாரங்களை நிறுவத் தவறிவிட்டதாகக் கண்டறிந்தது.

    இந்த வழக்கு 2013இல் மூன்று வயது சிறுமி காணாமல் போனதில் இருந்து உருவானது, பின்னர் அவரது உடல் அருகிலுள்ள குளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

    சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையில் 25 வயது காவலாளி கைது செய்யப்பட்டார்.

    மரண தண்டனை

    கீழ் கோர்ட்டில் மரண தண்டனை விதிப்பு

    இந்த நபர் 2019 ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.

    2021 ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றம் இந்த தண்டனையை உறுதி செய்து, அரிதிலும் அரிதான வழக்குகளில் ஒன்றாகக் கருதியது.

    இருப்பினும், சாட்சிகளின் சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டதுடன், தடயவியல் சான்றுகளை அறிவியல் ரீதியாக ஆதாரமற்றவை என்று அறிவித்தது.

    கணிசமான முரண்பாடுகள் காரணமாக கூறப்படும் வாக்குமூலத்தையும் அது நிராகரித்தது.

    விசாரணையை குறைபாடுள்ளதாகவும், கறைபடிந்ததாகவும் விமர்சித்த உச்ச நீதிமன்றம், ஏற்கனவே 12 ஆண்டுகள் சிறையில் கழித்த அந்த நபரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    மரண தண்டனை
    போக்சோ
    மகாராஷ்டிரா

    சமீபத்திய

    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்
    தனுஷின் 'குபேரா' ஓடிடி உரிமைகள் ₹50 கோடிக்கு விற்கப்பட்டதாம்! தனுஷ்
    மழைக்காலங்களில் கார்களை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி? நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை பருவமழை

    உச்ச நீதிமன்றம்

    டிஎம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருது வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு இந்தியா
    தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு திருமணங்கள்
    ஜிஎஸ்டி நோட்டீஸிற்கு உச்ச நீதிமன்றம் தடை; ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வு ஆன்லைன் கேமிங்
    கோத்ரா வழக்கு பிப்ரவரி 13-ம் தேதி விசாரிக்கப்படும்: உச்ச நீதிமன்றம் நிர்ணயம் இந்தியா

    மரண தண்டனை

    உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் கத்தார்
    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது கொலை
    சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை  கொலை
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி ஏமன்

    போக்சோ

    சாலஞ் வீடியோ என்ற பெயரில் ஆபாசம்: சம்மன் அனுப்பிய குழந்தைகள் நல வாரியம்  யூடியூப்
    போக்சோ வழக்குகள் அதிகரிப்பு: தனி நீதிமன்றங்கள் தேவை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் உச்ச நீதிமன்றம்

    மகாராஷ்டிரா

    அரிதிலும் அரிதான இரத்த வகை; தாயின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை; மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி காவல்துறை
    ரத்தன் டாடா மறைவு: மோடி உட்பட தலைவர்கள் இரங்கல், இறுதி சடங்கில் பங்கேற்கும் அமித் ஷா டாடா
    ரத்தன் டாடாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க மகாராஷ்டிர அமைச்சரவை தீர்மானம்  ரத்தன் டாடா
    மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025