NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும்
    மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும்
    இந்தியா

    மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும்

    எழுதியவர் Sindhuja SM
    April 28, 2023 | 02:11 pm 1 நிமிட வாசிப்பு
    மே 1 முதல் ஷீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படும்
    தற்போது வரை, ஷீரடி கோவிலின் பாதுகாப்புப் பொறுப்பை மாநில காவல்துறை கையாண்டு வந்தது.

    இந்தியாவின் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித தலமான ஷீரடி சாய்பாபா கோவில் மே 1 முதல் காலவரையின்றி மூடப்படும். இந்த கோவிலின் பாதுகாப்பிற்காக மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையை(CISF) நியமிக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஷீரடி சாய்பாபா கோவிலின் அறக்கட்டளை, பணிநிறுத்த போராட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மே 1 முதல் சாய்பாபா கோவில் நிர்வாகம் பணிநிறுத்த போராட்டம் செய்ய இருப்பதால், அன்று முதல் கோவில் காலவரையின்றி மூடப்படும்.பொதுவாக, மெட்ரோ நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களைப் பாதுகாக்கும் CISF படையால், கோவிலை பாதுகாக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

    இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்

    தற்போது வரை, ஷீரடி கோவிலின் பாதுகாப்புப் பொறுப்பை மாநில காவல்துறை கையாண்டு வந்தது. மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாதி, மத பேதமும் இன்றி அனைத்து பிரிவினரும் சாய்பாபாவின் முக்கிய தலமான இந்த கோவிலுக்கு விரும்பி செல்கின்றனர். இந்த கோவில் ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை(SSST) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. கோவில் வளாகத்தின் பராமரிப்பை மேற்பார்வையிடுவது, இலவச உணவு வழங்குவது போன்ற அறப்பணிகளை இந்த நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. ஒரு மத வழிபாட்டுத்தலத்துக்கு ஏற்படும் தனித்துவமான பாதுகாப்பு சவால்களை கையாள CISF பயிற்சி பெறவில்லை என்று SSST கூறி இருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மகாராஷ்டிரா
    மத்திய அரசு

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 7,533 கொரோனா பாதிப்பு: 44 பேர் உயிரிழப்பு  கொரோனா
    முதுமலை யானைகள் முகாமில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு  தமிழ்நாடு
    WFI பிரச்சனை: மல்யுத்த வீரர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது டெல்லி
    ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த வயோதிகர் கைது  பாரத் ஜோடோ யாத்ரா

    மகாராஷ்டிரா

    ஷீரடி சாய்பாபா கோயிலில் வசூலான நாணயங்களுக்கு இடமில்லாமல் வங்கிகள் திணறல்  வங்கிக் கணக்கு
    தீவிரமடையும் பாதிப்பு - கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க வேகமெடுக்கும் மகாராஷ்டிரா! கொரோனா தடுப்பூசிகள்
    மகாராஷ்டிரா பூஷன் விருது விழா: அதிக வெப்பத்தால் 11 பேர் உயிரிழப்பு இந்தியா
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    மத்திய அரசு

    ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கக்கூடாது: கிரண் ரிஜிஜு இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் சிலை மீட்பு - தமிழ்நாடு போலீசிடம் ஒப்படைப்பு!  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023