NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் 
    அரசுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

    தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 20, 2024
    08:16 am

    செய்தி முன்னோட்டம்

    அடுத்த வாரம் முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை துவங்குவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வார இறுதியும் சேர்த்து தொடர் விடுமுறையை முன்னிட்டு, டிசம்பர் 20, 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் சென்னையிலிருந்து மற்றும் சொந்த ஊருக்கும், தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பலர் பயணிக்க விரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்ந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 325 பேருந்துகள் (டிசம்பர் 20), 280 பேருந்துகள் (டிசம்பர் 21) இயக்கப்பட உள்ளன.

    மேலும், கோயம்பேட்டிலிருந்து ஓசூர், பெங்களூரு போன்ற இடங்களுக்கு 81 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    கிறிஸ்துமஸ் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
    - அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல்.#ArasuBus | #TamilNadu | #TransportDepartment | #BusOperation | #SETC | #WeekendOperation… pic.twitter.com/RVH5BkzPHA

    — ArasuBus (@arasubus) December 19, 2024

    பேருந்து

    சென்னைக்கு திரும்பவும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு

    கிளம்பாக்கம், கோயம்பேடு தவிர மாதவரத்திலிருந்தும் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

    அதேபோல வார இறுதி நாளன்று ஞாயிற்றுக்கிழமை, சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு, அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

    கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பயணிகள் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வெள்ளிக்கிழமை பயணம் செய்ய இதுவரை 13864 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த எண்ணிக்கை அதிகரிக்ககூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பேருந்துகள்
    தமிழ்நாடு
    தமிழ்நாடு செய்தி
    பள்ளிகளுக்கு விடுமுறை

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    பேருந்துகள்

    கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் உத்தரவு சென்னை
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பஸ்களுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு  கோயம்பேடு
    வார இறுதியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு  சென்னை
    தனியார் பேருந்துகளில் அதிக கட்டண வசூல் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்

    தமிழ்நாடு

    இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழைதான்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கனமழை
    கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்; குறைந்தபட்ச பாதிப்புடன் தப்பித்தது சென்னை வானிலை ஆய்வு மையம்
    ஃபெஞ்சல் புயல் எதிரொலி; மின்கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 10 வரை நீட்டிப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு மின்சார வாரியம்
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 2 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு செய்தி

    ஃபெஞ்சல் புயல் எதிரொலி; மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை மு.க.ஸ்டாலின்
    கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? விடுமுறை
    தொடர்ந்து பெய்து வரும் கனமழை; எந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை? கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 3 ) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    பள்ளிகளுக்கு விடுமுறை

    திருவள்ளூரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  தமிழ்நாடு
    தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழ்நாடு
    தீவிரமடைந்தது மிக்ஜம் புயல்; உஷார் நிலையில் தமிழகம்; 118 ரயில்கள் ரத்து தமிழகம்
    இராணிப்பேட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  ராணிப்பேட்டை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025