NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அதிக வந்தே பாரத் ரயில்கள் கொண்ட மண்டலமாக மாறிய தெற்கு ரயில்வே 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிக வந்தே பாரத் ரயில்கள் கொண்ட மண்டலமாக மாறிய தெற்கு ரயில்வே 
    மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களைப் பெற்ற தெற்கு ரயில்வே

    அதிக வந்தே பாரத் ரயில்கள் கொண்ட மண்டலமாக மாறிய தெற்கு ரயில்வே 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Sep 25, 2023
    02:02 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று மெய்நிகர் நிகழ்வின் மூலம் இந்தியா முழுவதும் ஒன்பது புதிய வந்தே பாரத் ரயில்களைத் துவக்கி வைத்தார் பிரதர் நரேந்திர மோடி. அவற்றில் மூன்று வந்தே பாரத் ரயில்களை தெற்கு ரயில்வே மண்டலம் பெற்றிருக்கிறது.

    முன்னதாக, ஏற்கனவே மூன்று வந்தே பாரத் ரயில்களைக் கொண்டிருந்த தெற்கு ரயில்வே மண்டலம், புதிய மூன்று ரயில்களுடன் மொத்தம் ஆறு வந்தே பாரத் ரயில்களைப் பெற்றிருக்கிறது. மேலும், இந்தியாவிலேயே அதிக வந்தே பாரத் ரயில்களைப் பெற்ற மண்டலமாகவும் இருக்கிறது தெற்கு ரயில்வே.

    ஆனால், வந்தே பாரத் ரயில்கள் இயங்கும் தூரத்தை வைத்துக் கணக்கிடும் போது, ஆறு வந்தே பாரத் ரயில்களுடன் நான்காவது இடத்தில் பின்தங்குகிறது தெற்கு ரயில்வே.

    இந்தியா

    அதிக தூரத்திற்கு வந்தே பாரத் ரயில்களை இயக்கும் வடக்கு ரயில்வே: 

    தூரத்தின் அடிப்படையில், நான்கு வந்தே பாரத் ரயில்களுடன் முதலிடத்தில் இருக்கிறது வடக்கு ரயில்வே மண்டலம். அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் மேற்கு மற்றும் வடமேற்கு ரயில்வே மண்டலங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில்கள் யாவும், அரை-அதிவேக வந்தே பாரத் ரயில்களாகும். அதாவது, இந்த ரயில்களானது மணிக்கு 160-200 கிமீ வேகம் வரை செல்லும் திறனைப் பெற்ற ரயில்களாகும்.

    இந்தப் புதிய ரயில்களுடன் சேர்த்து, தற்போது இந்தியாவில் 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கத்தில் இருக்கின்றன. இவற்றில் 14 ரயில்கள் பதினாறு பயணிகள் பெட்டிகளுடனும், 20 ரயில்கள் எட்டு பயணிகள் பெட்டிகளுடனும் இயக்கப்பட்டு வருகின்றன.

    ரயில்வே

    சென்னையிலிருந்து நான்கு வந்தே பாரத் ரயில்கள்: 

    தெற்கு ரயில்வே இயக்கி வரும் ஆறு வந்தே பாரத் ரயில்களில், நான்கு ரயில்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூர், விஜயவாடா மற்றும் மைசூரூ ஆகிய நான்கு நகரங்களுக்கு வந்தே பாரத் இயக்கப்பட்டு வருகிறது.

    அதிக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் மெட்ரோல் நகரங்களில் ஆறு வந்தே பாரத் ரயில்களைப் பெற்று முதலிடத்திருக்கிறது இருக்கிறது இந்திய தலைநகரான புதுடெல்லி.

    அதனைத் தொடர்ந்து, மும்பை மற்றும் ஹௌரா ஆகிய நகரங்களிலிருந்து நான்கு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    தற்போது இயங்கி வரும் 34 வந்தே பாரத் ரயில்களில், 24 ரயில்கள் நடப்பு (கடந்த ஏப்ரலில் துங்கிய) நிதியாண்டில் துவக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்
    இந்தியா
    தெற்கு ரயில்வே
    சென்னை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ரயில்கள்

    தாம்பரம்-செங்கோட்டை இடையேயான ரயில் வாரம் 3 முறை இயக்கப்படும்  சென்னை
    ஒடிசாவில் இரண்டு ரயில்களால் ஏற்பட்ட பெரும் விபத்து: பலர் உயிரிழப்பு இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி! மேற்கு வங்காளம்
    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா

    இந்தியா

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக மோதும் இந்தியா டேவிஸ் கோப்பை
    முற்றும் இந்தியா-கனடா பதற்றம்: விசா சேவைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை கனடா
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் அருணாச்சல பிரதேச வீரர்களுக்கு அனுமதி மறுத்த சீனா ஆசிய விளையாட்டுப் போட்டி
    இந்தியா கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் - அழைப்பு விடுக்கும் ஜஸ்டின் ட்ரூடோ கனடா

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! ரயில்கள்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்

    சென்னை

    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தேமுதிக
    சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம் தமிழ்நாடு
    சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் பயணம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 26 தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025