
ஸ்ரீ கங்காநகரில் 49.4° செல்சியஸ்; 2025 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் அதிகபட்ச வெப்பநிலை இதுதான்
செய்தி முன்னோட்டம்
வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று, ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அங்கு வெள்ளிக்கிழமை வெப்பநிலை 49.4° செல்சியஸ் ஆக பதிவானதாக குறிப்பிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் நாட்டில் எந்த வானிலை நிலையமும் பதிவு செய்த மிக அதிகபட்ச வெப்பநிலையாக இது அமைந்துள்ளதாகவும் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தி உள்ளது.
மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் பதிவாகியுள்ளன.
கிழக்கு ராஜஸ்தான், ஜம்மு பிரிவு, ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட வெப்ப அலை நிலைமைகள் காணப்பட்டன.
வெப்பநிலை
ராஜஸ்தானின் பல பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை பதிவு
ராஜஸ்தானில், ஸ்ரீ கங்காநகர் தவிர்த்து சுருவில் அதிகபட்சமாக 47.6° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ஜெய்சால்மர் 46.9° செல்சியஸ் வெப்பத்தை பதிவு செய்தது.
இதற்கிடையே, உத்தரப் பிரதேசத்தில், பண்டாவில் 44.6° செல்சியஸ் ஆக வெப்பம் பதிவானது.
அதிக வெப்பநிலை நிலவும் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைகளை வெளியிட்டது.
வானிலை ஆய்வு மையம் தனது ஆலோசனைக் குறிப்பில், பல இடங்களில், குறிப்பாக மேற்கு ராஜஸ்தானில் வெப்ப அலை நிலைமைகள் இருப்பதாகவும், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அது அறிவுறுத்தியுள்ளது.
வெப்ப அலைக்கு மத்தியில், ஜூன் 19 முதல் ஜூன் 25 வரை டெல்லி உட்பட வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எக்ஸ் தள பதிவு
Shri Ganganagar has reported a maximum temperature of 49.4°C on today, the 13th June 2025. This is the season’s highest maximum temperature reported by any station for the year 2025 over India. @ndmaindia @airnewsalerts @DDNewslive @WMO
— India Meteorological Department (@Indiametdept) June 13, 2025