NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காவிரி விவகாரம்: தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காவிரி விவகாரம்: தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் 
    காவிரி விவகாரம் - தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம்

    காவிரி விவகாரம்: தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 11, 2023
    11:54 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிய காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டித்தும், அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் தமிழக டெல்டா மாவட்டங்களில் இன்று(அக்.,11) முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    காவிரி படுகை கூட்டி இயக்கம் சார்பில் தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    இந்த போராட்டத்தால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கடைகள் மூடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    காலை 6 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ள இப்போராட்டத்தின் ஓர் பகுதியாக, மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்ட குழுவினர் மறியலில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    போராட்டம் 

    மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் 

    அதன்படி, கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்னர் மறியல் போராட்டம் நடக்கக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது என்றும் கூறப்படுகிறது.

    இப்போராட்டத்திற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

    டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அவசரமாக கூடவுள்ள நிலையில், அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 13,000 கன அடி திறந்துவிட வேண்டும் என்னும் கோரிக்கையினை தமிழக அரசு முன்வைக்க முடிவு செய்துள்ளது.

    இத்தகைய சூழலில் இப்போராட்டம் இன்று நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    காவிரி
    போராட்டம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    காவிரி விவகாரம் - கர்நாடக அரசு மேல்முறையீடு மனு தாக்கல்  கர்நாடகா
    7 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு புதுச்சேரி
    முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் சென்னை
    விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு  தமிழக அரசு

    காவிரி

    காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
     'எங்கள் காவிரி எங்கள் உரிமை' - குரல் கொடுக்கும் கன்னட நடிகர்கள்  ட்விட்டர்
    பெங்களூர் முழு அடைப்பு- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை தமிழ்நாடு
    காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு - கர்நாடக அரசு கர்நாடகா

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு தமிழ்நாடு
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு தமிழ்நாடு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை

    மத்திய அரசு

    மக்களவை தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பு: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தேர்தல்
    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு ஜம்மு காஷ்மீர்
    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் சிங் கோவிந்த் தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு அமைப்பு தேர்தல்
    'ஒரே நாடு ஒரே தேர்தல்'சாத்தியமா? இதற்கு தேவைப்படும் அரசியலமைப்புத் திருத்தங்கள் என்ன? தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025