NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி
    செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி

    செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி

    எழுதியவர் Nivetha P
    Aug 07, 2023
    12:16 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் ஓய்வு எடுத்த பின்னர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    இதனிடையே செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

    இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3ம் நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என்றும், அவர் உடல்நிலை முழுவதுமாக தேறிய பின்னர் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருந்தார்.

    இந்த தீர்ப்பினை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதாக தெரிகிறது.

    தீர்ப்பு 

    செந்தில் பாலாஜியை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

    இதனைத்தொடர்ந்து, இந்த மேல்முறையீட்டு மனுவானது போபண்ணா மற்றும் சுந்தரேஷ் உள்ளிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இருதரப்பினர் சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் பலமான வாதங்களை கடந்த 2ம் தேதி முன்வைத்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இன்று(ஆகஸ்ட்.,7)இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி, செந்தில் பாலாஜி கைது நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும் என்று கூறி தீர்பளித்துள்ளனர்.

    அதேபோல் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை, அது சரி தான் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதியும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    கைது
    செந்தில் பாலாஜி
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    உச்ச நீதிமன்றம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு  போக்குவரத்து காவல்துறை
    ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கிற்கு இன்று தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்  தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டு குறித்த தீர்ப்பு வெளியானது - தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்  ஜல்லிக்கட்டு
    ஜல்லிக்கட்டு வெற்றி விழாவினை கொண்டாடுவோம் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஜல்லிக்கட்டு

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  செந்தில் பாலாஜி
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தமிழ்நாடு செய்தி
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    ஆந்திரா, கேரளா மாநிலத்திலிருந்து இறக்கப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி
    இருதயத்தில் 90% பிளாக், மனித உரிமைகள் ஆணையம் தலையீடு; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள் செந்தில் பாலாஜி
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025