NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை
    கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை எதிரொலி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 22, 2023
    10:33 am

    செய்தி முன்னோட்டம்

    கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள தென்தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், ஏனைய வடதமிழக கடலோர பகுதிகளில், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

    இதன் காரணமாக இன்று, நவம்பர் 22 , கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசியில் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்.

    இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் நேற்று காலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    card 2

    காரைக்கால், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

    சென்னையில் நேற்று இரவு முதல், இன்று காலை வரை தொடர்ந்து மழை நீடித்தது.

    எனினும், வானிலை அறிக்கையின் படி, இன்று மிதமழையே இருக்கும் என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆட்சியர்கள் அறிவித்தனர்.

    எனினும், காரைக்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட திருநள்ளாறு, திருப்பட்டினம், அம்பகரத்தூர், கோட்டுச்சேரி, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    அதேபோல புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த இரு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    card 3

    நாகப்பட்டினம், மயிலாடுதுறை பள்ளிகள்

    எனினும், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் என அந்த மாவட்டங்களின் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

    விடுமுறை அளிப்பின், பள்ளிப்பாடங்கள் ஆன்லைன் வகுப்பாக எடுக்கப்படுமா என்பது குறித்தும் தலைமை ஆசிரியரே தீர்மானிக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

    அதனால் அந்த மாவட்டத்தின் பள்ளி மாணவர்கள், தங்கள் பள்ளி நிர்வாகத்தினை நேரடியாக அணுகி விடுமுறை குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    மழை
    பள்ளிகளுக்கு விடுமுறை
    பள்ளிகளுக்கு விடுமுறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கனமழை

    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்  பெட்ரோல்
    3 தமிழக மாவட்டங்களில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை  தமிழ்நாடு
    சிக்கிமில் திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம் சிக்கிம்
    3 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு

    மழை

    வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் டெல்லி
    தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை  தெலுங்கானா
    சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வானிலை ஆய்வு மையம்

    பள்ளிகளுக்கு விடுமுறை

    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி திருச்செந்தூர்
    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் புதுச்சேரி
    மாணவர்களுக்கு நற்செய்தி! 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!  புதுச்சேரி
    ஜூன் 12 ஆம் தேதிக்கு பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு!  பள்ளி மாணவர்கள்

    பள்ளிகளுக்கு விடுமுறை

    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை
    நவம்பர் 10 வரை பள்ளிகளை மூட உத்தரவு: டெல்லியில் அதிரடி  டெல்லி
    காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு நாளை முதல் குளிர்கால விடுமுறை: டெல்லியில் அதிரடி  டெல்லி
    கனமழை எச்சரிக்கை எதிரொலி- தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025