NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை
    ஒரே நேரத்தில் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்

    பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் இன்டர்போல் உதவியை நாடும் காவல்துறை

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 09, 2024
    11:09 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று சென்னையிலுள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில், ஒரே நேரத்தில் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    எனினும் தொழில்நுட்ப உதவியுடன் இமெயில் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால், தற்போது மத்திய அரசு மற்றும் இண்டர்போல் உதவியை சென்னை போலீசார் நாடியுள்ளனர்.

    நேற்று சென்னை அண்ணா நகர், பாரிஸ் கார்னர், ஆர்.ஏ. புரம், கோபாலபுரம் மற்றும் முகப்பேர் ஆகிய இடங்களில் செயல்படும் பிரபல தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில், வெடிகுண்டு மிரட்டல் ஈமெயில் வடிவத்தில் வந்தது, தமிழகத்தை கதிகலங்க செய்தது.

    வெடிகுண்டு மிரட்டல்

    மர்ம நபரை தேடும் காவல்துறை

    இது குறித்து பேசிய சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் சின்ஹா, குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளது எனவும், தொழில்நுட்ப உதவியுடன் அந்த மெயில் அனுப்பட்ட ஐபி முகவரியை கண்டுபிடிக்க சைபர் க்ரைம் போலீசார் முயற்சித்து வருவதாக கூறினார்.

    இந்த நிலையில் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் சென்னை சைபர் கிரைம் போலீசார் திணறிவருகின்றனர்.

    ஏற்கனவே, இதே போல சென்னை எலியட்ஸ் கடற்கரையில் குண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட அதே மெயில் ஐடியில் இருந்துதான் தற்போதும் இமெயில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியை சென்னை போலீசார் நாடியுள்ளனர். தொடர்ந்து, இண்டர்போல் உதவியோடு குற்றவாளிகளை கைது செய்யவும் தமிழக காவல்துறை முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக காவல்துறை
    காவல்துறை
    காவல்துறை
    பள்ளிகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை

    காவல்துறை

    பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து பதற்றம் பீகார்
    நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக GPay, Paytm ஐ தொடர்புகொண்ட டெல்லி காவல்துறை நாடாளுமன்றம்
    பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன் கர்நாடகா
    நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு  மக்களவை

    காவல்துறை

    ஜனவரி 18 வரை, மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  மும்பை
    நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி  கைது
    ஜார்கண்ட் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த மாவோயிஸ்டுகள் மாவோயிஸ்ட்
    காணாமல் போன இந்திய பெண்ணை கண்டுபிடிக்க, $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது FBI அமெரிக்கா

    பள்ளிகள்

    தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள் தெலுங்கானா
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்  தமிழகம்
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025