NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி: சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி: சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா
    இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்

    சென்னை பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி: சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 08, 2024
    07:03 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தீவிர சோதனைக்கு பிறகு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை அண்ணா நகர், பாரிஸ் கார்னர், ஆர்.ஏ. புரம், கோபாலபுரம் மற்றும் முகப்பேர் ஆகிய இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளான- சென்னை பப்ளிக் ஸ்கூல், செட்டிநாடு வித்யாஷ்ரம் உள்ளிட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதனை அடுத்து பள்ளி வளாகத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் சோதனை செய்தனர்.

    வெறும் புரளி

    மர்ம நபரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் 

    இது குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மிரட்டல் குறித்து காலை 10:30 மணி அளவில் முதல் தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு Bomb Detection and Deactivation Squad அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், இது குறித்து பொது மக்கள் யாரும் பதற்றமடைய தேவையில்லை என கூறினார்.

    மெயில் அனைத்தும் ஒரே இ-மெயில் ஐ.டி.யில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரித்ததில் அது ஒரு புரளி என தெரியவந்துள்ளதாகவும், இ-மெயில் அனுப்பிய நபரை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இந்த வெடிகுண்டு மிரட்டல் தேர்வு பயத்திற்காக விடுக்கப்பட்டதை போல தெரியவில்லை எனவும் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பள்ளிகள்

    சமீபத்திய

    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்
    கூட்டுறவு சங்கத்தில் 50 சவரன் போலி நகைகள் அடமானம் வைத்து 18.67 லட்சம் ரூபாய் கடனாக பெற்றது அம்பலம்  சிவகங்கை
    கர்நாடகாவில் அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று: ஒன்பது மாதக் குழந்தைக்கு கோவிட் -19 தொற்று  கோவிட் 19

    சென்னை

    ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம்- அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு
    கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு  கொரோனா
    சென்னையில் அமையும் அடிடாஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி கூடம்  தமிழ்நாடு
    என் அண்ணனை இழந்து விட்டேன்"- விஜயகாந்துக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய பின் சூர்யா பேட்டி நடிகர் சூர்யா

    பள்ளிகள்

    தெலுங்கானாவில் தமிழ் பள்ளிகள் மூடப்பட்டதால் பாதிப்படைந்த 8 லட்சம் குழந்தைகள் தெலுங்கானா
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு  தமிழ்நாடு
    தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தேதிகள் மாற்றம்  தமிழகம்
    அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு: புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025