NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு 
    ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு - மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு

    ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவு 

    எழுதியவர் Nivetha P
    Nov 10, 2023
    05:22 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவினை தாக்கல் செய்தது.

    அதில், அதில், 'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஆளுநர் உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்றும்,

    'ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று(நவ.,10) உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிகள் முன்னர் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "ஆளுநர் தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் எந்தவொரு மசோதாக்களுக்கும், பணி நியமன கோப்புகள் உள்ளிட்டவைகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்கிறார். கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட கோப்புகளில்கூட அவர் கையெழுத்திடுவதில்லை" என்று அரசு சார்பில் வாதாடப்பட்டது.

    உத்தரவு 

    எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு 

    மேலும், இதனால் தமிழக அரசின் உரிமைகள் மட்டுமல்லாமல், தனி நபர் உரிமையும் பறிக்கப்படுகிறது என்றும்,

    தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை ஆளுநர்களால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

    அதனைத்தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு என்பதால் இவ்வழக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவ்வழக்கை தீபாவளிக்கு பிறகு விசாரிக்கலாமா?" என்று கேட்டுள்ளனர்.

    அதன்பின்னர் எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து ஆளுநரின் செயலாளர் மற்றும் மத்திய அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையினை வரும் 24ம்.,தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

    அன்றைய தினம் மத்திய அரசு சார்பிலான வழக்கறிஞர்களும் ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    ஆர்.என்.ரவி
    உச்ச நீதிமன்றம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழக அரசு

    கர்நாடகாவில் 'பந்த்' - தமிழக எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு  கர்நாடகா
    சிறு குறு நிறுவனங்களின் ஒரு கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு  தமிழ்நாடு
    பிளஸ் 2 மாணவர்கள் ஊக்கத்தொகை: விடுபட்டோர் விவரங்கள் சேகரிப்பு  பள்ளி மாணவர்கள்
    விரைவில் திருநங்கைகளுக்கும் உரிமை தொகை: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு  மு.க.ஸ்டாலின்

    ஆர்.என்.ரவி

    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு
    பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழ்நாடு
    தமிழ்நாடு அமைதி பூங்காவா? என கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி  தமிழ்நாடு
    அரசியல் சாசனத்தை மீறும் கவர்னரை ஜனாதிபதி உடனே திரும்ப பெறவேண்டும் - செல்வப்பெருந்தகை கவர்னர்

    உச்ச நீதிமன்றம்

    காவிரி மேலாண்மை உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் தமிழக அரசு
    சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின்
    ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஆந்திரா
    காவிரி விவகாரம் - செப்.26ல் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம்  தமிழ்நாடு

    மத்திய அரசு

    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பள்ளி நலக்குழு - மத்திய பள்ளி கல்வித்துறை அறிவிப்பு நீட் தேர்வு
    புது பொலிவுடன் படுக்கை வசதியுடனான வந்தே பாரத் ரயில் - வெளியான புகைப்படங்கள்  வந்தே பாரத்
    உஜ்வாலா திட்டம் - சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் ரூ.100 குறைப்பு  விலை
    ரேடியோக்களில் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கான அடிப்படை விலையை உயர்த்திய மத்திய அமைச்சகம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025