NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி?
    எனினும், இதுபற்றி, சட்டப்பேரவை செயலருடன் ஆலோசித்து, சபாநாயகர் அப்பாவு முடிவு எடுப்பார்

    முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி; மீண்டும் MLA ஆகிறார் பொன்முடி?

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 11, 2024
    05:40 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

    இதன் காரணமாக அவர் மீண்டும் எம்எல்ஏ பதவியில் தொடரக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது.

    எனினும், இதுபற்றி, சட்டப்பேரவை செயலருடன் ஆலோசித்து, சபாநாயகர் அப்பாவு முடிவு எடுப்பார்.

    கடந்த திமுக ஆட்சியின் போது, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை 2011ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவர்களை விடுவித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டில், பொன்முடி, அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.

    உச்ச நீதிமன்றம்

    உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த பொன்முடி

    உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பால், அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார் பொன்முடி.

    சபாநாயகர் அய்யாவுவும், பொன்முடியின் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தார்.

    இந்த நிலையில்தான், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை காலத்தில், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

    வழக்கின் விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

    அதோடு பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொன்முடி
    உச்ச நீதிமன்றம்
    திமுக
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பொன்முடி

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி  மு.க ஸ்டாலின்
    'பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம் திமுக

    உச்ச நீதிமன்றம்

    முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு காரணமாக முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கேரளா
    அதானி-ஹிண்டன்பர்க் வழக்கு: செபி விசாரணையை மாற்ற எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அதானி
    'உண்மை வென்றது': செபி விசாரணையை மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்ததை அடுத்து கௌதம் அதானி பேச்சு  அதானி
    பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் அமெரிக்கா

    திமுக

    பொன்முடி வழக்கில் வருமான வரி செலுத்தாதது தான் காரணம் என திமுக சட்டத்துறை செயலாளர் விளக்கம்  சிறை
    அமைச்சர் பொன்முடியின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்தமனம் எழுதிய உயர் நீதிமன்ற தீர்ப்பு அரசியல் நிகழ்வு
    'ஓ.எஸ்.மணியனின் தேர்தல் வெற்றி செல்லும்' - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி சென்னை உயர் நீதிமன்றம்
    'இந்திக்காரர்கள் தமிழகத்தில் கழிப்பறைக் கழுவுகிறார்கள்': தயாநிதி மாறனின் பேச்சால் சர்ச்சை  தயாநிதி மாறன்

    சென்னை உயர் நீதிமன்றம்

    அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு  தமிழக அரசு
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் லியோ
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    நடிகை ஜெயப்ரதாவின் 6 மாத சிறை தண்டனையினை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025