NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'விசாரணைக்கு தகுதியான எதையும் கனடா அனுப்பவில்லை': நிஜ்ஜார் வழக்கு குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'விசாரணைக்கு தகுதியான எதையும் கனடா அனுப்பவில்லை': நிஜ்ஜார் வழக்கு குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர்

    'விசாரணைக்கு தகுதியான எதையும் கனடா அனுப்பவில்லை': நிஜ்ஜார் வழக்கு குறித்து பேசிய எஸ் ஜெய்சங்கர்

    எழுதியவர் Sindhuja SM
    May 13, 2024
    05:03 pm

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் கனடா நான்காவது நபரை கைது செய்திருக்கும் நிலையில், அது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

    செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பான ஏதேனும் ஆதாரங்கள் அல்லது தகவல்களை கனடா பகிர்ந்து கொண்டால், அது குறித்து விசாரணை நடத்த இந்தியா தயாராக உள்ளது என்றார்.

    ஆனால், விசாரணைக்கு தகுதியான எதையும் கனடாவிடம் இருந்து இந்தியா பெறவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

    "குறிப்பிட்ட மற்றும் தகுதியான (ஆதாரங்கள்) எதையும் நாங்கள் இதுவரை பெறவில்லை. மேலும் கடந்த சில நாட்களாக இது தொடர்பாக எதுவும் மாறியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

    இந்தியா 

    நிஜ்ஜார் கொலை வழக்கில் நான்காவது இந்தியர் கைது

    வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படும்போது, ​​அது அந்த நாட்டின் அரசாங்கத்திற்கோ அல்லது அந்த நாட்டின் தூதரகத்திற்கோ தெரிவிக்கப்பட வேண்டும்.

    எனவே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் குறித்த தகவல்களை கனடா இந்தியாவிடம் தெரிவித்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

    கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் இந்திய அரசாங்கத்தால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டவர் ஆவார்.

    இந்நிலையில், அவரது கொலை வழக்கில் தொடர்பாக நான்காவது இந்தியர் கைது செய்யப்பட்டதாக கனேடிய போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    எஸ்.ஜெய்சங்கர்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    கனடா

    பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2018 முதல் 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு, கனடாவில் அதிக இறப்புகள் பதிவு இங்கிலாந்து
    அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால் கனடாவை விட்டு வெளியேறும் மக்கள் ஜஸ்டின் ட்ரூடோ
    2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை உலகம்

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025