NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு 
    இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.

    எஸ்.ஜெய்சங்கர் உட்பட 11 மாநிலங்களவை எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 17, 2023
    03:31 pm

    செய்தி முன்னோட்டம்

    வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட 11 தலைவர்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    திட்டமிட்டபடி மேற்கு வங்கத்தில் 6 இடங்களுக்கும், குஜராத்தில் 3 இடங்களுக்கும், கோவாவில் ஒரு இடத்துக்கும் ஜூலை 24-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறாது.

    இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.

    எனினும், இந்த தொகுதிகளில் போட்டியிடும் தலைவர்களை எதிர்த்து போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பதால், வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஒருவர் மட்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்.

    சஜிக்

    எஸ்.ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்

    6 திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களும், ஐந்து பாஜக வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவர்.

    மேற்கு வங்க மாநிலங்களவைத் தொகுதி ஒன்றில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

    வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.

    இது தவிர, குஜராத்தில் இருந்து பாஜகவை சேர்ந்த பாபுபாய் தேசாய் மற்றும் கேசரிதேவ் சிங் ஜாலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    மேலும், மேற்கு வங்கத்தில் இருந்து அனந்த் மகாராஜ் மற்றும் கோவாவில் இருந்து சதானந்த்-ஷெட் தனவாடே ஆகிய பாஜக வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    டெரெக் ஓ பிரையன், சுகேந்து சேகர் ராய், டோலா சென், சாகேத் கோகலே, சமுருல் இஸ்லாம் மற்றும் பிரகாஷ் பாரிக் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஆவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாநிலங்களவை
    இந்தியா
    பாஜக
    திரிணாமுல் காங்கிரஸ்

    சமீபத்திய

    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்

    மாநிலங்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி

    இந்தியா

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2023 : இந்தியாவுக்கு ஒரே நாளில் மூன்று தங்கம் ஆசிய சாம்பியன்ஷிப்
    மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கிளாஸிக் மாடல் கார்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் இந்திய ராணுவம் மஹிந்திரா
    'பிரான்சில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்': பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு  பிரான்ஸ்
    தென்னிந்தியாவின் முதல் AI செய்தித் தொகுப்பாளரை அறிமுகம் செய்த கன்னட செய்தி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு

    பாஜக

    பாஜக கட்சியில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார் மைத்ரேயன்  ஜெயலலிதா
    தமிழகத்தில் இருந்து 25 NDA தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்: அமித்ஷா  2024 மக்களவை தேர்தல்
    எங்களோடு இருப்பது தான் பாஜக'வுக்கு பலம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  அதிமுக
    பாஜக -அதிமுக கூட்டணி நீடிக்குமா? அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக செயலாளர்கள் அதிமுக

    திரிணாமுல் காங்கிரஸ்

    திரிபுரா வாக்கெடுப்பு: தெரிந்துகொள்ள வேண்டியவை இந்தியா
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் மேற்கு வங்காளம்
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025