NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் 
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம் 

    எழுதியவர் Nivetha P
    Jun 26, 2023
    11:59 am

    செய்தி முன்னோட்டம்

    கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது துவங்கியுள்ள நிலையில், அங்கு கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

    இதன் காரணமாக அம்மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே 25 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனால் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப்பகுதி மாவட்டங்களான கோவை, கன்னியாகுமரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    தமிழ்நாடு மாநிலத்தில் இதுவரை டெங்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே எல்லைப்பகுதி மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    நடவடிக்கைகள் தீவிரம் 

    கண்காணிப்பு பணிகளில் 18 ஆயிரம் பேர் ஈடுபாடு

    இந்த நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் வடிவேலன் கூறியுள்ளதாவது, "கேரளாவில் டெங்கு பரவல் அதிகம் உள்ளதால் தமிழகத்தில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதனால், அம்மாநில டெங்கு பாதிப்புகள் குறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு தகவல் அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

    அதேபோல் பாதிப்புகளை உருவாக்கும் கொசுக்கள் மற்றும் லார்வா உற்பத்தி குறித்தும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற பொது இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு ஏற்பாடுகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இந்த கண்காணிப்பு பணிகளில் 18 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெங்கு காய்ச்சல்
    கேரளா
    தமிழ்நாடு
    சுகாதாரத் துறை

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை

    டெங்கு காய்ச்சல்

    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்! ஹெல்த் டிப்ஸ்
    டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது  இந்தியா
    டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை  சென்னை

    கேரளா

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் சேர்ந்தார் இந்தியா
    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து பினராயி விஜயன்
    சபரிமலையில் வரும் 15ம் தேதி விஷூ கனி தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு துவக்கம் கோவில் திருவிழாக்கள்
    பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள் பூட்டான்

    தமிழ்நாடு

    பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தமிழகம்
    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழகம்
    அமைச்சர்கள் இலாகா மாற்றம் ஆளுநர் ஏற்பு; செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு மறுப்பு  ஆளுநர் மாளிகை
    கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் தமிழக மாவட்டங்களின் பட்டியல் தமிழகம்

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025