NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு: 2021இல் முக்கிய அரசியல் தலைவர்களின் மொபைல்கள் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு: 2021இல் முக்கிய அரசியல் தலைவர்களின் மொபைல்கள் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரம்
    இஸ்ரேலிய சைபர் பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'பெகாசஸ்' எனப்படும் ஸ்பைவேர்

    பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு: 2021இல் முக்கிய அரசியல் தலைவர்களின் மொபைல்கள் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரம்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 31, 2023
    06:00 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸின் சசி தரூர், பவன் கேரா, சுப்ரியா ஷ்ரினேட்; திரிணாமுல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா; ஆம் ஆத்மியின் ராகவ் சாதா; சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி; சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி; மற்றும் AIMIMஇன் அசாதுதின் ஓவைசி ஆகிய எதிர்க்கட்சி தலைவர்கள் அரசாங்கத்தின் ஆதரவுடன் ஹேக்கிங் செய்பவர்கள் தங்களது ஐபோன்களை ஹேக் செய்ய முயற்சிப்பதாக புகார் அளித்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து அவர்களது ஐபோன்களுக்கு இது தொடர்பான எச்சரிக்கை வந்ததை அடுத்து அவர்கள் இன்று அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதற்கிடையில், "இந்த அறிவிப்பு பெகாசஸ் ஸ்பைவேர் பிரச்சனையை நினைவுபடுத்துகிறது" என்று ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சாதா கூறியுள்ளார்.

    இந்நிலையில், 2021இல் நடந்த பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு என்றால் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சாதா கூறியிருப்பதாவது:

    Early this morning I received a concerning notification from Apple, warning me about a potential state-sponsored spyware attack on my phone. The notification states that, “If your device is compromised by a state-sponsored attacker, they may be able to remotely access your… pic.twitter.com/JrVD9Zh9im

    — Raghav Chadha (@raghav_chadha) October 31, 2023

    பிஜ்க்ன்வ்

    பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு என்றால் என்ன?

    ஜூலை 2021இல், NSO குழுமம் எனப்படும் இஸ்ரேலிய சைபர் பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'பெகாசஸ்' எனப்படும் ஸ்பைவேர், இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள தனிநபர்களின் மொபைல் போன்களை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டதாக உலகளாவிய கூட்டு விசாரணைத் திட்டம் தெரிவித்திருந்தது.

    ஆனால், அப்போது உலகளாவிய கூட்டு விசாரணையின் அறிக்கையை இந்திய அரசு மீண்டும் மீண்டும் நிராகரித்தது. மேலும், இது தேசிய பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடுவதற்கு சமம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.

    ஆனால், இது தொடர்பான உண்மை ஆதரங்களை வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது. எனினும்,பெகாசஸின் பயன்பாட்டை ஒருபோதும் அரசாங்கம் வெளிப்படையாக மறுக்கவில்லை.

    ட்ஜ்வ்க்ன்

    இதை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உருவாக்கிய நிபுணர் குழு 

    அக்டோபர் 27, 2021 அன்று, உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி NV ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கில் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி RV ரவீந்திரன்(ஓய்வு) தலைமையில் ஒரு நிபுணர் குழுவை நியமித்தது.

    இந்த குழுவிற்கு நீதிமன்றம் ஏழு விதிமுறைகளை உருவாக்கியது. இந்த ஸ்பைவேரின் மூலம் இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமை(தனியுரிமைக்கான உரிமை) மீறப்பட்டதாக என்பதை கண்டறியவே இந்த ஏழு விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.

    பெகாசஸை யார் வாங்கினார்கள், மனுதாரர்கள் உண்மையில் இந்த ஸ்பைவேரால் குறிவைக்கப்பட்டார்களா, இந்திய குடிமக்களுக்கு எதிராக பெகாசஸ் போன்ற ஸ்பைவேரைப் பயன்படுத்துவதை எந்தச் சட்டங்கள் நியாயப்படுத்துகின்றன போன்ற கேள்விகளுக்கு பாதிலளிப்பதற்காகவே அந்த நிபுணர் குழு உருவாக்கப்பட்டது.

    ட்ஜ்கவ்ன்ல

    உச்ச நீதிமன்ற விசாரணையில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது?

    விசாரணைக்காக மனுதாரர்களுக்கு சொந்தமான 29 மொபைல் போன்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன.

    விசாரணையின் போது, அந்த 29 கைப்பேசிகளுள் 5 கைப்பேசிகளில் ஸ்பைவேர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த ஸ்பைவேர்கள் பெகாசஸ் தான் என்பதை நிரூபிக்க எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை.

    மேலும், ஆகஸ்ட் 25, 2022 அன்று, இந்த பிரச்னையை உச்ச நீதிமன்றம் விசாரித்த போது, நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு சுத்தமாக ஒத்துழைக்கவில்லை என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

    இதைத் தொடர்ந்து, நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கை அடுத்த விசாரணைக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது. ஆனால், அதன்பின்னர் எந்த விசாரணையும் நடைபெறவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எதிர்க்கட்சிகள்
    காங்கிரஸ்
    மத்திய அரசு
    பாஜக

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    எதிர்க்கட்சிகள்

    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  பாஜக
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  காங்கிரஸ்
    ஆம் ஆத்மியை ஆதரித்தது காங்கிரஸ்: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்  ஆம் ஆத்மி

    காங்கிரஸ்

    ராகுல் காந்தி பாஜக எம்பிக்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததால் சர்ச்சை  நாடாளுமன்றம்
    நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு எதிராக மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு மத்திய அரசு
    நீலகிரியில் பழங்குடியின மக்களுடன் நடனமாடிய ராகுல் காந்தி நீலகிரி
    'சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் சந்தித்தது என்பது அப்பட்டமான பொய்': பாஜக எம்பிக்கு காங்கிரஸ் பதிலடி  பாஜக

    மத்திய அரசு

    மூடிஸ் நிறுவனத்தின் ஆதார் மதிப்பாய்வுக்கு பதிலளித்த மத்திய அரசு இந்தியா
    தாதாசாகெப் பால்கே விருது 2023- பழம்பெரும் நடிகை வஹீதா ரஹ்மானுக்கு அறிவிப்பு விருது
    உஸ்பெகிஸ்தானில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு உஸ்பெகிஸ்தான்
    மத்திய அரசின் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஷால் விஷால்

    பாஜக

    கர்நாடகா மாநிலத்தில் பாஜக'வினர் போராட்டத்தினை கலைத்த தேனீக்கள் காங்கிரஸ்
    'இந்து மதம் உலகத்திற்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது': ஆ.ராசாவின் வீடியோவை வெளியிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை  தமிழ்நாடு
    சனாதன கொள்கை: கட்சியின் பக்கமா? கொள்கையின் பக்கமா? குழம்பும் அண்ணாமலை சனாதன தர்மம்
    செப்டம்பர் 23ஆம் தேதி நடக்கிறது 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025