NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள்
    பாதுகாப்பு கோரி 'ரேப்பிடோ' ஓட்டுநர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

    தொடரும் ஓலா, ஊபர் போராட்டம்; பாதுகாப்பு கோரும் ராப்பிடோ ஓட்டுனர்கள்

    எழுதியவர் Nivetha P
    Oct 18, 2023
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    சமீபகாலமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 'ரேப்பிடோ' பைக் டாக்ஸியின் சேவை அதிகரித்து வருகிறது.

    இதனால் ஓலா, ஊபர் உள்ளிட்ட ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் 'ரேப்பிடோ' ஓட்டுநர்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில், நேற்று(அக்.,17) தமிழ்நாடு 'ரேப்பிடோ' பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தினை சேர்ந்த சுமார் 50 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

    சங்கம் 

    பாதுகாப்பு கோரி புகார் மனு 

    அந்த புகாரில், தங்களை ஒரு சில ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதோடு, தங்கள் மீது தாக்குதல் நடத்தி தரக்குறைவாக பேசுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

    இவர்களின் இந்த மோதல் போக்கு காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

    தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

    ஆய்வு 

    ஓலா, ஊபர் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் போராட்டம் 

    தொடர்ந்து, தங்களது புகாரை உடனடியாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதனிடையே இவர்களது இந்த புகாரை ஏற்ற காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், முன்னதாக ஓலா, ஊபர் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் ஒன்றிணைந்து பைக் டாக்ஸி சேவைகளை நிறுத்த வேண்டும், வாகனத்திற்கான மீட்டர் கட்டணங்கள் நிர்ணயம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

    போராட்டம் 

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடரும் போராட்டம் 

    அதன்படி, நேற்று முன்தினம்(அக்.,16) சென்னை சின்னமலை பகுதியிலுள்ள சரக்கு போக்குவரத்து அலுவலகம் முன்பு ஒன்றுக்கூடி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அதே போல் நேற்றும்(அக்.,17)இவர்களது போராட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தது.

    இன்றும்(அக்.,18)இவர்களது போராட்டம் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் சுமார் 10 ஆயிரம் ஓட்டுநர்கள் கொண்டு நடத்தப்படுகிறது.

    கட்டணம் 

    இரு மடங்காக அதிகரித்த கட்டணம் 

    இதற்கிடையே இவர்கள் தங்கள் மொபைல் போனில் உள்ள செயலியை நீக்கி ஒரு லட்சத்திற்கும் மேலான ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் குறைந்தளவு வாகனங்களே இயக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

    இதன் காரணமாக, சென்னையில் 20கிமீ.,க்கு ரூ.400 வசூலிக்கப்பட்ட கட்டணம், தற்போது ரூ.1,200 முதல் ரூ.1,400 வரை வசூலிக்கப்படுவது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த கட்டணமானது அதிகரிக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஓலா
    தமிழ்நாடு
    சென்னை
    போராட்டம்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்
    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி

    ஓலா

    Ola S1 Air புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3 பேட்டரி வேரியண்ட் அறிமுகம்! ஆட்டோமொபைல்
    Ampere Primus v/s Ola S1: எது சிறந்த தேர்வாக இருக்கும்? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    தமிழக அரசுடன் ஓலா நிறுவனம் மிகப்பெரிய ஒப்பந்தம்! 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    தமிழ்நாடு

    ஜெருசலம் பயணத்தை தவிர்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் இஸ்ரேல்
    நெஞ்சுவலி காரணமாக செந்தில் பாலாஜி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி செந்தில் பாலாஜி
    'அணையை தெர்மோகோல் போட்டு மூடி வைத்துள்ளோம்': சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் நக்கல் துரைமுருகன்
    காவிரி விவகாரம் குறித்து மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம்  காவிரி

    சென்னை

    வறிய நிலையிலுள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழி  மு.க ஸ்டாலின்
    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்  பெட்ரோல்
    மதுரை-சென்னை இடையிலான வைகை எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றம் மதுரை
    முக்கியமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் மதுரை

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு தமிழ்நாடு
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு தமிழ்நாடு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025