NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
    நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

    நிலத்தகராறில் 8 முறை ட்ராக்டர் ஏற்றி கொல்லப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

    எழுதியவர் Nivetha P
    Oct 25, 2023
    07:32 pm

    செய்தி முன்னோட்டம்

    நிலத்தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் ட்ராக்டர் கொண்டு 8 முறை ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்னும் பகுதியினை சேர்ந்தவர்கள் பகதூர் சிங் மற்றும் அதூர் சிங்.

    இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்று கூறப்படுகிறது.

    இவர்கள் இருவரது குடும்பத்தினர் இடையே, நெடு நாட்களாக சொத்து விவகாரம் குறித்த நிலத்தகராறு ஒன்று இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் இன்று(அக்.,25) காலை பகதூர் சிங் தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு அந்த சர்ச்சை மிகுந்த நிலத்திற்கு ட்ராக்ட்டரில் சென்றுள்ளார்.

    இது குறித்து அறிந்த அதுர் சிங்கும் அங்கு தனது குடும்பத்தினரை அழைத்து கொண்டு சென்றுள்ளார் என்று தெரிகிறது.

    கொலை 

    4 பேர் கைது - காவல்துறை விசாரணை 

    இதனைத்தொடர்ந்து இரண்டு குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், அவர்கள் ஒருவரையொருவர் கற்களை கொண்டு தாக்கிக்கொண்டனர்.

    இந்த தாக்குதலுக்கிடையே அதூர் சிங்கின் மகன்களுள் ஒருவரான நிர்பத் சிங் கீழே விழுந்துள்ளார்.

    அப்போது அவரது சகோதரர் என்று கூறப்படும் தாமோதரர் சிங், நிர்பத் சிங் மீது ட்ராக்டரை ஏற்றியுள்ளார்.

    தனது மற்ற குடும்ப உறுப்பினர்கள் தடுத்தும் அதனை பொருட்படுத்தாத தாமோதரர், நிர்பத்சிங் மீது 8 முறை டிராக்டரை முன்னும்பின்னும் ஏற்றி இறக்கியுள்ளார்.

    இதில் அந்த இளைஞர் பரிதாபமாக சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும், இத்தகராறில் 10 பேர் காயமடைந்த நிலையில் தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    பதபதைக்க வைக்கும் கொடூரம் 

    Disclaimer:🚨🚨🛑🛑🚫❌

    This horrific scene is from Bharatpur, Rajasthan, during a fight over a land dispute, Nirpat Gurjar fell on which Bahadur Gurjar's people ran a tractor over him. Nirpat died on the spot after being wheeled 8 times. The accused absconded. pic.twitter.com/1VFnxK7qfI

    — 🐎Ashwamedha🐎 (@_Ashwamedha) October 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொலை
    ராஜஸ்தான்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கொலை

    டிஜிட்டல் ஆதாரங்கள் சேகரிப்பதற்கான விதிகள் வகுக்க 4 வார கால அவகாசம் - உயர்நீதிமன்றம் உயர்நீதிமன்றம்
    மனைவியுடன் கள்ளத்தொடர்பு: நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தத்தை குடித்த கணவன் இந்தியா
    'சல்மான் கானை கண்டிப்பாக கொல்வோம்': கனடாவை சேர்ந்த ரவுடி மிரட்டல்  கனடா
    சீனாவில் மழலையர் பள்ளியில் கத்திக்குத்து, ஆறு பேர் பலியான பரிதாபம் சீனா

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் இந்தியா
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா

    காவல்துறை

    தனியொரு நபரால் திருடப்பட்ட 114 கிலோ எடைகொண்ட புராதன புத்தர் சிலை - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    'ஆண்டி' என்று அழைத்ததற்காக ஏடிஎம் காவலாளியை செருப்பால் அடித்த பெங்களூரு பெண் இந்தியா
    இந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை என்ஐஏ
    ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி திருமணங்கள்

    காவல்துறை

    சென்னை தி.நகரில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம்  சென்னை
    உஜ்ஜைன் பாலியல் பலாத்கார சம்பவம்- பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவ முன்வந்த காவலர்கள் மத்திய பிரதேசம்
    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்  பெட்ரோல்
    பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி   க்ரைம் ஸ்டோரி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025