NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல்
    தொடர் மழை காரணமாக புழல் ஏரி நேற்று முழு கொள்ளளவையும் எட்டியது.

    சென்னையில் தொடரும் மழை: 3 நாட்களில் தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நெருங்க இருக்கும் சூறாவளி புயல்

    எழுதியவர் Sindhuja SM
    Dec 01, 2023
    10:14 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் நேற்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    குறிப்பாக கடலோர தமிழகத்தில், டிசம்பர் 1 முதல் 4 வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதால், இன்னும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்.

    சென்னை உள்ளிட்ட 6 தமிழக மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை தவிர, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை இருக்கும்.

    ட்ஜ்வ்க்ன்

    பள்ளிகளுக்கு இன்று விடுமுறை உண்டா?

    மழை காரணமாக நேற்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

    பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி இருப்பதால் செங்கல்பட்டில் உள்ள 2 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அடையாறு ஆற்றின் கரையோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இதற்கிடையில், சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக புழல் ஏரி நேற்று முழு கொள்ளளவையும் எட்டியது. இதனால், நேற்று அந்த ஏரியில் இருந்து 389 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது.

    டஸ்ஜ்க்வ்ன்ல்

    தமிழக-ஆந்திரக் கடலோரப் பகுதிகளை கடக்க இருக்கும் சூறாவளி புயல்

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியயது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது மேலும் தீவிரமடைந்து டிசம்பர் 3-ஆம் தேதி சூறாவளி புயலாக மாறி, அதன்பின் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 4-ஆம் தேதி தமிழகம் மற்றும் ஆந்திரா கடற்கரையை கடக்கும்.

    இதனையடுத்து, கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு டிசம்பர் 2 முதல் 4 வரையிலும், ஆந்திரா மற்றும் ஏனாமிற்கு டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளிலும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கேரளா, மாஹே, புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்

    #JUSTIN கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் 3-ஆவது நாளாக வெளியேறாமல் தேங்கி நிற்கும் மழைநீர் #ChennaiRains #Waterlogging #Kodambakkam #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/Ka5PmRZD7x

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) December 1, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    பாம்பன் கடற்கரைக்கு செல்ல தடை

    #JUSTIN பாம்பன் கடற்கரைக்கு செல்ல தடை #Rameswaram #Pamban #Dhanushkodi #News18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/NbcJsPnRQO

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) December 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    வானிலை ஆய்வு மையம்
    பள்ளிகளுக்கு விடுமுறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது காவல்துறை
    சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை கனமழை
    சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார்  மருத்துவமனை
    பாடகி சுசீலாவுக்கு கௌரவ முனைவர் பட்டம்- முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் பாடகர்

    தமிழ்நாடு

    12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    தமிழகத்தில் 6-12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை
    மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிய, தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு த்ரிஷா
    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  சபரிமலை

    வானிலை ஆய்வு மையம்

    13 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  கனமழை
    தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது; நாளை கனமழை பெய்ய வாய்ப்பு கனமழை
    10 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு

    பள்ளிகளுக்கு விடுமுறை

    திருச்செந்தூர் அருகே பரிதாபம் - திடீர் வெடிச்சத்தம் கேட்டு 10 வயது பள்ளி மாணவன் பலி திருச்செந்தூர்
    புதுச்சேரியில் மார்ச் 16 முதல் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல் புதுச்சேரி
    மாணவர்களுக்கு நற்செய்தி! 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!  புதுச்சேரி
    ஜூன் 12 ஆம் தேதிக்கு பள்ளிகளின் திறப்பு ஒத்திவைப்பு!  பள்ளி மாணவர்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025