
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவிழப்பதில் தாமதம் அடைந்துள்ளது.
இதனால் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில், காலை 10 மணிவரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென் வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 17 ஆம் தேதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது தமிழ்நாட்டின் கடற்கரை நோக்கி நகர்ந்தது. இதனால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த அமைப்பு ஆந்திரா நோக்கி நகர்ந்ததால் அப்போது எதிர்பார்க்கப்பட்ட கனமழை தவிர்க்கப்பட்டது.
தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி U-டர்ன் போட்டு தமிழக கடற்கரை பக்கம் மீண்டும் திரும்பியுள்ளது.
மழை
2 நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை நீடிக்கும்
நேற்றைய நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வங்கக்கடலின் வட கடலோர மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து வருகிறது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 31 ஆம் தேதி வரை, மிதமான மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 10 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட KTCC மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
26 and 27th Tamil Nadu will get rains from the low pressure which will fizzle out today
— Tamil Nadu Weatherman (@praddy06) December 25, 2024
----------------------
Chennai gets rare rains on Christmas day 2001, 2003, 2022 and now 2024. In the last 25 years, we have got rains only 4 times on Christmas day. Chennai and KTCC has… pic.twitter.com/cewMnxWBpi