NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி 
    பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி

    பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி 

    எழுதியவர் Nivetha P
    Jun 23, 2023
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை ஓரணியாக திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.

    இதற்காக அவர் பாட்னாவில் இன்று(ஜூன்.,23)தேசியளவிலான எதிர்க்கட்சி கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கலந்துக்கொள்ளவேண்டும் என்றும் முன்னதாகவே அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி பாட்னாவில் 15 கட்சி தலைவர்கள் தற்போது இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் இக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, "நமது நாட்டில் தற்போது பாஜக வெறுப்புணர்வு மற்றும் வன்முறையினை பரப்பி தேசத்தினை பிளவுபடுத்த செயல்பட்டு வருவதாக தெரிகிறது. ஆனால், எதிர்க்கட்சியாக உள்ள நாங்கள் அனைவரும் அன்பினை பரப்பி அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம். அதற்குத்தான் இங்கு வந்துள்ளோம்" என்று கூறினார்.

    உரை 

    பாஜக 2, 3 நபர்கள் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது - ராகுல் காந்தி 

    தொடர்ந்து பேசிய அவர்,"நாட்டில் தற்போது தத்துவ ரீதியான மோதல் நடக்கிறது. அதில் ஒன்று காங்கிரஸ் கட்சியின் தேச ஒற்றுமைக்கான சிந்தனை, மற்றொன்று ஆர்எஸ்எஸ்'ன் தேசப்பிரிவினை சிந்தனை" என்று கூறினார்.

    தொடர்ந்து, "பாரத் ஜோடா யாத்திரையின் போது பீகார் மக்கள் தங்களது முழு பங்களிப்பினை அளித்தனர். காங்கிரஸ் மீதான நம்பிக்கையால் தான் பீகார் மக்கள் யாத்திரையில் பங்கேற்றனர்" என்று தெரிவித்தார்.

    மேலும், கர்நாடகா தேர்தலின்போது பாஜக அரசியல் தலைவர்கள் அனைவரும் அங்குச்சென்று வெற்றிப்பெறுவோம் என கூக்குரலிட்டார்கள். ஆனால் இறுதியில் தோல்வியுற்றனர் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்காக செயல்படுகிறது என்று கூறிய அவர், பாஜக 2, 3 நபர்கள் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது என்பது மக்களுக்கே தெரியும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    பாஜக
    பீகார்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தியின் தகுதி நீக்க பிரச்சனை: டெல்லியில் காங்கிரஸின் மாபெரும் போராட்டம் காங்கிரஸ்
    ராகுல் காந்திக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு - காங்கிரஸ் காங்கிரஸ்
    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதவியில் இருந்து தகுதி நீக்கம் காங்கிரஸ்
    ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்: அடுத்து என்ன நடக்கும் இந்தியா

    பாஜக

    'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்  இந்தியா
    கர்நாடக தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது இந்தியா
    கர்நாடக தேர்தல் 2023: வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்டது, முன்னிலையில் இருப்பது யார்? கர்நாடகா தேர்தல்
    கர்நாடக தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டது பாஜக  இந்தியா

    பீகார்

    பீகார் பாலம் இடிந்து விழுந்ததற்கு முதல்வர் நிதிஷ் குமார் அளித்த பதில் இந்தியா
    முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம் இந்தியா
    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025