NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன?
    8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன?

    8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன?

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 29, 2023
    07:09 am

    செய்தி முன்னோட்டம்

    கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 8 முன்னாள் இந்திய வீரர்களுக்கு, கடந்த அக்டோபர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    அதனை அடுத்து மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது அந்த மரண தண்டனை, சிறை தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதாக நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    எனினும், இந்த வழக்கு சார்ந்த விவரங்கள் மிகவும் ரகசியமாக பதுக்கப்பட்டதால், அதன் விவரங்கள் தெரியவில்லை எனவும் கூறப்பட்டது.

    மேலும், விரிவான தீர்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்கள் மற்றும் வீரர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக விவரித்துள்ளது.

    தற்போது, இந்த தண்டனை குறைக்கப்பட்டதை அடுத்து, அடுத்த கட்டநடவடிக்கை என்னவாக இருக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

    card 2

    தண்டனை குறைப்பு குறித்து இந்தியா கூறியது என்ன?

    "கத்தாருக்கான எங்கள் தூதர், பிற அதிகாரிகள், மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த விவகாரத்தின் ஆரம்பம் முதல் நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தோம். மேலும் அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்" என்று MEA அறிக்கை கூறியது.

    அந்த அறிக்கையில், "இந்த வழக்கின் விசாரணையின் ரகசியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தன்மை காரணமாக, இந்த நேரத்தில் மேற்கொண்டு எந்த கருத்தையும் கூறுவது பொருத்தமாக இருக்காது" என்று கூறியதுடன், நடவடிக்கைகளின் உணர்திறன் மற்றும் ரகசிய தன்மையையும் குறிப்பிட்டுள்ளது.

    card 3

    அடுத்து என்ன?

    "இந்தியாவிற்கும் கத்தாருக்கும் இடையில் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை மாற்றுவதற்கான ஒப்பந்தத்தின்" கீழ், எட்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவது மற்றும் இந்திய சிறைகளில் அவர்களது காலத்தை அனுபவிக்கும் விருப்பத்தை இந்தியா ஆராயலாம்.

    டிசம்பர் 2, 2014 அன்று இந்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு நாடுகளைச் சேர்ந்த கைதிகளும், தங்கள் குடும்பங்களுக்கு அருகில், எஞ்சியிருக்கும் தண்டனையை அனுபவிக்க உதவுகிறது. அது அவர்களின் சமூக மறுவாழ்வுக்கு உதவுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கத்தார்
    மரண தண்டனை
    மத்திய அரசு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கத்தார்

    உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் மரண தண்டனை
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை வீரர்கள் வழக்கில் இந்தியா மேல்முறையீடு கடற்படை
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் இடைநிறுத்த பேச்சுவார்த்தை வெற்றி: 50 பணயக்கைதிகளை விடுவிக்க ஒப்புதல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    மரண தண்டனை

    நிமிஷா பிரியாவின் மரண தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது கொலை
    சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை  கொலை
    ஏமனில் மரண தண்டனையில் உள்ள மகளைக் காப்பாற்ற "பணம்" ஒப்பந்தம் செய்ய தாய்க்கு அனுமதி ஏமன்

    மத்திய அரசு

    குடியுரிமை திருத்தச்சட்ட இறுதி வரைவு அடுத்த மார்ச் மாதத்திற்குள் தயாராகும் என அறிவிப்பு  உள்துறை
    இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - கடந்து வந்த பாதை உதயநிதி ஸ்டாலின்
    தேசிய மருத்துவ ஆணையத்தின் லோகோவில் இந்தியாவின் பெயர் 'பாரத்' என மாற்றம் இந்தியா
    முதல் தவணை தங்கக் கடன் பத்திரங்களுக்கான மீட்பு விலையை அறிவித்த ரிசர்வ் வங்கி  முதலீடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025