NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம்
    மத்திய அரசுக்கு தங்களது வலிமையைக் காட்ட பாடுபடப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்

    டெல்லியில், மத்திய அரசிற்கு எதிராக, பஞ்சாப் விவசாயிகள் இன்று மகாபஞ்சாயத்து நடத்த திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 14, 2024
    09:15 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் வியாழக்கிழமை மகாபஞ்சாயத்து நடத்த உள்ளனர்.

    சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் அழைப்பின் பேரில், மகாபஞ்சாயத்துக்கு முன்பாக உச்சனாவில் இருந்து ஜிண்ட் வரை பாத யாத்திரை நடத்தப் போவதாகவும், மத்திய அரசுக்கு தங்களது வலிமையைக் காட்ட பாடுபடப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) சட்டம் கொண்டு வர வேண்டும், அனைத்து விவசாயிகளின் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

    பிப்ரவரி 18-ம் தேதி கடைசிச் சுற்றுப் பேச்சுவார்த்தையின் போது, ​​மத்திய முகமைகள் மூலம் ஐந்து ஆண்டுகள் விவசாயிகளிடமிருந்து MSP விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கியது, அரசு. ஆனால், விவசாயிகள் அதனை நிராகரித்தனர்.

    போராட்டக்களத்தில் வாழ்க்கை

    ஷம்புவில் விவசாயிகள் எப்படி வாழ்கிறார்கள்? 

    பஞ்சாப் உளவுத்துறையின் மதிப்பீட்டின்படி, சுமார் 7,000-8,000 விவசாயிகள் தொடர்ந்து ஷம்பு எல்லையில் தங்கியுள்ளனர்.

    அவர்கள் அன்றாட வாழ்க்கையை எப்படி தொடர்கின்றனர்?

    டிராக்டரை தங்கள் கூடாரமாக மாற்றிக்கொண்டனர்.

    அதில் LCD டிவி வசதியும் உண்டு. அதன்மூலம் போராட்டத்தின் நிலவரத்தை காணலாம்.

    பல விவசாயிகள் தங்கள் டிரெய்லர்களில் டேபிள் ஃபேன்கள், பல்புகள் மற்றும் மரக் கட்டில்களை வைத்துள்ளனர்.

    துணி துவைக்க, இலவச வாஷிங் மெஷின் சேவையும் உள்ளது.

    உடல்நலம் தொடர்பான அவசரநிலைகளுக்கு, கல்சா உதவி உட்பட பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மருந்துகள் மற்றும் முதலுதவி வழங்கும் சிறு-சுகாதார மையங்களை அமைத்துள்ளன.

    உணவைப் பொறுத்தவரை, தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு பல இடங்களில் 24 மணிநேர லங்கார் எனப்படும் சமூக சமையலறை சேவைகள் உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    விவசாயிகள்
    மத்திய அரசு
    பஞ்சாப்

    சமீபத்திய

    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா
    துருக்கிய ஃபேஷன் பிராண்டுகள் விற்பனையை நிறுத்தம்; இந்திய ஈ-காமர்ஸ் நிறுவனங்கள் அதிரடி துருக்கி

    டெல்லி

    அயோத்தி ராமர் கோவில் விழாவிற்காக அறிவிக்கப்பட்ட அரை நாள் விடுமுறை முடிவை திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ்  அயோத்தி
    குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள இன்று இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பிரான்ஸ்
    குடியரசு தின அணிவகுப்பு: முக்கிய இடத்தில் 'நாரி சக்தி'; தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரான்ஸ் அதிபர்  குடியரசு தினம்
    குடியரசு தின விழா அணிவகுப்பில் சாகசங்களை செய்து அசத்திய பெண்களின் வீடியோக்கள்  பிரான்ஸ்

    விவசாயிகள்

    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா
    அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையினை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-காவல்துறை தடுத்ததால் பரபரப்பு  காவல்துறை
    பயிர்களை அழித்த என்.எல்.சி., சரமாரி கேள்விகளை எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்  நெய்வேலி
    கோடீஸ்வரர் ஆன தக்காளி விவசாயி: 45 நாளில் ரூ.4 கோடி சம்பாத்தியம் ஆந்திரா

    மத்திய அரசு

    8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களின் மரண தண்டனை குறைப்பு; அடுத்தது என்ன? கத்தார்
    மத்திய அரசின் புதிய 'ஹிட் அண்ட் ரன்' சட்டத்தால் என்ன பாதிப்பு? நாடு தழுவிய போராட்டங்களின் பின்னணி இந்தியா
    பன்னுன் படுகொலை சதி: நிகில் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்

    பஞ்சாப்

    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025