NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை

    பணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை

    எழுதியவர் Srinath r
    Dec 28, 2023
    05:54 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் விவசாய நிலம் வாங்கியதை குறிப்பிட்டு, பணம் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

    டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான ஹெச்.எல்.பஹ்வா என்பவரிடம் இருந்து 2006ம் ஆண்டு பிரியங்கா நிலம் வாங்கியதாகவும், அதே நிலத்தை பிப்ரவரி 2010ல் அவருக்கு விற்பனை செய்ததாகவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

    இருப்பினும் இந்த வழக்கில் பிரியங்கா மீது குற்றம் சாட்டப்படவில்லை.

    பிரியங்காவின் கணவர் ராபர்ட் வர்தா 40.08 ஏக்கர் மதிப்பிலான மூன்று வெவ்வேறு நிலங்களை பஹ்வாவிடம், 2005-2006 காலகட்டத்தில் வாங்கி, மீண்டும் 2010ம் ஆண்டு அவருக்கே விற்பனை செய்துள்ளார்.

    இதே முகவரிடம் பிரியங்கா காந்தியும் நிலம் வாங்கி, மீண்டும் அவருக்கே விற்பனை செய்துள்ளதாக அமலாக்கத்துறை கூறுகிறது.

    2nd card

    அமலாக்கத் துறை குற்றப்பத்திரிக்கையில் பிரியங்காவின் கணவர் பெயர்

    கடந்த செவ்வாய்க்கிழமை அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில், ராபர்ட் வத்ரா பெயர் இடம் பெற்றிருந்தது.

    இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக ஆயுத வியாபாரியும், லண்டனுக்கு தப்பியோடியவருமான சஞ்சய் பண்டாரி என்பவர் உள்ளார்.

    பண்டாரி மோசடி செய்யப்பட்ட பணத்தின் மூலம் வாங்கிய வீட்டை, ராபர்ட் வத்ரா புதுப்பித்து அங்கு தங்கியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டுகிறது.

    கடந்த 2016 ஆம் ஆண்டு பண்டாரி லண்டனுக்கு தப்பிய நிலையில், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று, அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் அரசு இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒப்புக்கொண்டது.

    3rd card

    பண மோசடி வழக்கில் புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த என்ஆர்ஐ தொழிலதிபர் செருவத்தூர் சாக்குட்டி தம்பி(சிசி) மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த சுமித் சாதா ஆகியோருக்கு எதிராக, இந்த வழக்கில் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    வத்ராவின் நெருங்கிய கூட்டாளியான தம்பி, கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தற்போது இவர் ஜாமினில் உள்ளார்.

    சஞ்சய் பண்டாரி கணக்கில் காட்டாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாகவும், அதை தம்பி மற்றும் சுமித் பாதுகாத்தும், பயன்படுத்தியும் வந்ததாக அமலாக்கத்துறை கூறுகிறது.

    பண்டாரி லண்டனில் வைத்திருந்த வீட்டை புதுப்பித்து, அதில் சுமித்துடன் வத்ரா தங்கியிருந்தது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறிந்தது.

    இவர்கள் இருவரும், ஃபரிதாபாத் பகுதியில் நிலங்களை வாங்கியதாகவும், ஒருவருக்கொருவர் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரியங்கா காந்தி
    காங்கிரஸ்
    ஹரியானா
    இங்கிலாந்து

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பிரியங்கா காந்தி

    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ஜம்மு காஷ்மீர்
    காஷ்மீரில் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியோடு பனி சறுக்கு சவாரி - வைரல் வீடியோ ராகுல் காந்தி
    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம் இந்தியா
    2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு ராகுல் காந்தி

    காங்கிரஸ்

    ராஜஸ்தான் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் மல்லிகார்ஜூன் கார்கே  மல்லிகார்ஜுன் கார்கே
    நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸுடன் தொடர்புடைய ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம் இந்தியா
    'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ்  மகளிர் ஆணையம்
    தெலுங்கானாவில் இன்று தேர்தல் வாக்குப்பதிவு: நேருக்கு நேர் மோதுகின்றன பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக  தெலுங்கானா

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    இங்கிலாந்து

    இங்கிலாந்தின் முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை: தனது சகோதரிக்கு கருப்பையை தானம் செய்த பெண் உலகம்
    டெல்லியில் உள்ள இந்து கோவிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழிபாடு  டெல்லி
    ஸ்காட்லாந்து குருத்வாராவிற்குள் இந்திய தூதரை நுழைய விடாமல் தடுத்த தீவிர சீக்கியர்கள் இந்தியா
    இந்திய தூதரை குருத்வாராவிற்குள் நுழைய விடாததால் சர்ச்சை: ரிஷி சுனக்கை அணுகியது இந்திய அரசாங்கம் பிரிட்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025