Page Loader
ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து; ஒமர் அப்துல்லா அரசு விரைவில் பதவி ஏற்பு
ஒமர் அப்துல்லா அரசு விரைவில் பதவி ஏற்பு

ஜம்மு காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து; ஒமர் அப்துல்லா அரசு விரைவில் பதவி ஏற்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 14, 2024
08:51 am

செய்தி முன்னோட்டம்

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018 ஆண்டு முதல், அப்போதைய பிடிபி-பாஜக கூட்டணி முறிந்ததை அடுத்து இப்பகுதியில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே 2019 இல், அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தது மத்திய அரசு. அதன் பின்னர் சில வாரங்களுக்கு முன்னர் இம்மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அதில், தேசிய மாநாட்டு சட்டமன்ற கட்சியின் தலைவராக ஒமர் அப்துல்லா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவர் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ளார். ஒமர் அப்துல்லா, கடந்த 2009 முதல் 2014 வரை, ஜம்மு-காஷ்மீர் மாநிலமாக இருந்தபோது, ​​NC-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post