NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆசிரியர்கள் தினம்: 75 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசு தலைவர்
    ஆசிரியர்கள் தினம்: 75 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசு தலைவர்
    இந்தியா

    ஆசிரியர்கள் தினம்: 75 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசு தலைவர்

    எழுதியவர் Venkatalakshmi V
    September 05, 2023 | 09:48 am 1 நிமிட வாசிப்பு
    ஆசிரியர்கள் தினம்: 75 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசு தலைவர்
    75 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவிக்கிறார் குடியரசு தலைவர்

    ஆண்டுதோறும், ஆசிரியர்கள் தினத்தன்று, நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 'தேசிய நல்லாசிரியர் விருது' தந்து கௌரவிப்பார் இந்திய குடியரசு தலைவர். அந்த வழக்கத்தில், இந்த ஆண்டு, நாடு முழுவதிலும் இருந்து, 75 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, இன்று (செப்டம்பர் 5), டெல்லியில் உள்ள விக்யான் பவனில் வைத்து, 'தேசிய நல்லாசிரியர் விருது' அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'நல்லாசிரியர் விருது'- ஒரு பாராட்டு பட்டயம், 50 000 ரூபாய் ரொக்க பரிசும், வெள்ளி பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம், 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள் மற்றும் திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகத்திலிருந்து 12 ஆசிரியர்கள், இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    விருது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்கள் 

    மதுரை அலங்காநல்லூர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பணிபுரிந்து வரும் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் என்ற ஆசிரியருக்கும், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் மாலதி என்ற ஆசிரியைக்கும் இந்த வருடத்திற்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை உடன் இணைந்து கல்வி அமைச்சகம், இந்த 75 ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது. விருதுகள் பெறும் இந்த ஆசிரியர்கள் அனைவரும், ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால் விருதை பெற்ற பிறகு, பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள் எனக்கூறப்படுகிறது. இந்த ஆசிரியர் தினத்தன்று, நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, நியூஸ்பைட்ஸ் சார்பாக எங்களது வாழ்த்துக்கள்!

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிரியர்கள் தினம்
    ஜனாதிபதி
    டெல்லி

    சமீபத்திய

    ஆசிரியர்கள் தினம்

    ஆசிரியர்கள் தினம்: உங்கள் ஆசானுக்கு நீங்கள் தரக்கூடிய பரிசுகள்  வாழ்க்கை

    ஜனாதிபதி

    ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை ஜி20 மாநாடு
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு  தமிழ்நாடு
    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி மு.க ஸ்டாலின்

    டெல்லி

    கர்நாடகா: முஸ்லீம் மாணவர்களை பாகிஸ்தானுக்கு போக சொன்ன ஆசிரியை இடமாற்றம் கர்நாடகா
    சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார்  உதயநிதி ஸ்டாலின்
    சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி காங்கிரஸ்
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது கைது
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023