NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்

    ராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 29, 2025
    02:44 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள "தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் வழங்கப்படுமா?" என்பது முக்கிய அரசியல் கேள்வியாக உள்ளது.

    இந்த சூழ்நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர், "தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்குவது அதிமுகவின் கடமை" எனக் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா கூறியதாவது: "அரசியலில் நம்பிக்கையே முக்கியம். அதன்படி கமலுக்கு சீட் வழங்கப்பட்டது. அதை வரவேற்கிறோம். அதே போல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய வார்த்தைகளையும் நிரூபிக்க வேண்டும். தேமுதிகவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்குவது அதிமுகவின் கடமை." எனக்கூறினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    ஏற்கனவே 2 முறை எம்.பி. பதவி தே.மு.தி.க.வுக்கு வந்த போது அன்புமணிக்கும், ஜி.கே.வாசனுக்கும் கொடுத்தார்கள்.. இப்போது எங்களுடைய நேரம்.. இ.பி.எஸ். சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும்.. பிரேமலதா திட்டவட்டம்..#DMDK | #Premalatha | #EPS | #RajyaSabha | #PolimerNews pic.twitter.com/d7sJdgrBOT

    — Polimer News (@polimernews) May 29, 2025

    அதிமுக

    அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

    பிரேமலதா விஜயகாந்தின் கூற்றுப்படி, 2024 மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், தற்போது அதைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

    "மாநிலங்களவை இடம் வழங்கப்படவில்லை என்றால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம். பொறுமையுடன் இருக்கிறோம். நாங்கள் பதற்றமின்றி, தெளிவாக இருக்கிறோம். 'பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள்' என்ற பழமொழி போலவே நடந்துகொள்கிறோம்," என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அதிமுக தரப்பில், வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை கூட்டம் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடை பெறுகிறது.

    இதன் முடிவில் தேமுதிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படுமா என்பதையே அரசியல் வட்டாரம் தற்போது கவனிக்கிறது.

    மறுபுறம், திமுக ஏற்கனவே தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரேமலதா
    மாநிலங்களவை
    தேர்தல்
    அதிமுக

    சமீபத்திய

    ராஜ்யசபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல் பிரேமலதா
    ஆசிரியர், எழுத்தாளர் என பன்முகத் திறமைகளுடன் நடிகர் ராஜேஷின் 47 ஆண்டு திரையுலக பயணம்! தமிழ் சினிமா
    வெப் வெர்ஷனை மேம்படுத்தும் புதிய மீடியா ஹப் அம்சத்தை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் அவர்களாகவே இந்தியாவுடன் விரைவில் இணைவார்கள்; ராஜ்நாத் சிங் உறுதி ராஜ்நாத் சிங்

    பிரேமலதா

    தேமுதிகவின் அடுத்த தலைவர் பிரேமலதா விஜயகாந்த்; அவரை பற்றி சிறு பார்வை  தேமுதிக
    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை - விஜயகாந்த் உடல் நல்லடக்கம்  விஜயகாந்த்
    நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் நடிகர் விஜய்
    ராஜ்யசபா சீட் கேட்கும் தேமுதிக; மறுக்கும் அதிமுக: இழுபறியில் கூட்டணி பேச்சுவார்த்தை தேமுதிக

    மாநிலங்களவை

    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு இந்தியா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா

    தேர்தல்

    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நாளை அறிமுகம்; சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தாக்கல் செய்கிறார் ஒரே நாடு ஒரே தேர்தல்
    31 பேர் கொண்ட குழு, 90 நாள் காலக்கெடு: 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழு பற்றி அனைத்தும் இங்கே ஒரே நாடு ஒரே தேர்தல்
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை 39 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு பரிந்துரை ஒரே நாடு ஒரே தேர்தல்
    ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் தமிழக அரசு

    அதிமுக

    முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவையும், எம்ஜிஆர்யும் புகழ்ந்த மோடி பிரதமர் மோடி
    சிறுமி கொலை வழக்கு: புதுச்சேரியில் இன்று முழு கடையடைப்பு புதுச்சேரி
    "Say No To Drugs & DMK": ட்விட்டரில் தனது பெயரை மாற்றிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி  தமிழகம்
    தேர்தல் கூட்டணியில் நிலைமாறுகிறதா தேமுதிக? பாஜக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு தேமுதிக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025